பி.சி., மற்றும் பலர் செல்லும் போலீஸ் வேன் திஹார் சிறைக்கே: சு.சுவாமி!

Published:

swami chidambaram - 2026

ஐ.என்.எக்ஸ் மீடியா நிதி முறைகேடு வழக்கில் பொருளாதாரக் குற்றம் புரிந்ததாகக் குற்றம் சாட்டப் பட்டு சிபிஐ., மற்றும் அமலாக்கத்துறை விசாரணைகளில் இருந்த முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று நீதிமன்றக் காவலில் திஹார் சிறைக்கு அனுப்பப் பட்டார்.

இந்நிலையில், இந்த ஊழல் வழக்குகளில் அதிகம் ஈடுபாடு காட்டி, தண்டனை பெற்றுத் தருவேன் என்று வெகு காலமாக கூறிக் கொண்டிருந்த பாஜக., மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியம் சுவாமி, இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

பி.சி., மற்றும் பல கிரிமினல்கள், வேறு பல வழக்குகளில் போலீஸ் வேனில் அமர்ந்து செல்லும் அனைத்துப் பாதையுமே திஹாருக்குத்தான்.. என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ப.சிதம்பரம் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப் படுவதற்கு முன்பும் பின்பும், திஹார் சிறையில் நேரம் கழிப்பார் என்று கூறியிருந்தார்.

ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை, பப்பா சோர், பேட்டா சோர் என்று, தந்தை திருடன், மகன் திருடன் என்று தனது டிவிட்டர் பதிவுகளில் குறிப்பிட்டு வந்தார் சுப்பிரமணியம் சுவாமி.

ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img