spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாஉ.பி.,யில் சிறுமியை காதலிப்பதாக இஸ்லாத்துக்கு மதம் மற்றி, நண்பர்களுக்கு விருந்தாக்கி...

உ.பி.,யில் சிறுமியை காதலிப்பதாக இஸ்லாத்துக்கு மதம் மற்றி, நண்பர்களுக்கு விருந்தாக்கி…

- Advertisement -

உத்தரப் பிரதேசத்தில் முஸ்லீம் இளைஞன் ஒருவன், சிறுமியை பலவந்தமாக மதமாற்றம் செய்து, பின்னர் பாலியல் பலாத்காரம் செய்தான். பின்னர் அந்தச் சிறுமியை நண்பர்களுடன் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தான். இது குறித்து போலீஸில் புகார் அளிக்கப் பட, அந்தச் சிறுமியை தாக்கியுள்ளான். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஷாஜஹான்புரில் நாகோஹி என்ற பகுதியில் முகமது அசார் என்பவரால் சிறுமி வலுக்கட்டாயமாக இஸ்லாத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். இது தொடர்பில் பரேலியில் லவ் ஜிஹாத் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் அவரது நண்பர்களால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும், போலீசில் புகார் செய்யப்பட்டது! இதன் பின்னர், அந்தச் ​​சிறுமி குற்றம் சாட்டப்பட்டவரால் ஆசிட் வீசித் தாக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான சிறுமி, ஷாஜகான்பூரின் நாகோஹி பகுதியில் வசிப்பவர். பிலிபிட்டில் தனது படிப்புக்காக, தனது சகோதரியுடன் வசித்து வந்தார்.
அங்கே அஸார் என்ற இளைஞர், தனது மதத்தை மறைத்து, அந்தச் சிறுமியை காதல் விவகாரத்தில் சிக்க வைத்துள்ளார். பின்னர், அந்தச் சிறுமியை உடல் உறவுக்கு வற்புறுத்தி வீடியோ எடுத்துள்ளார். தொடர்ந்து அந்த வீடியோவை கசியவிடுவதாக அச்சுறுத்தி தன் காரியத்தை சாதித்துக் கொண்டுள்ளார்.

பின்னர், கடந்த ஏப்ரல் மாதம் அச்சுறுத்தி தன்னை பரேலிக்கு அழைத்து வந்து, மதம் மாறும்படி கட்டாயப்படுத்தியதாக சிறுமி போலீஸ் டி.ஐ.ஜி.யிடம் புகார் அளித்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமி இது குறித்து புகார் அளித்த போது, தன்னை அசார் ஒரு வாடகை அறையில் வைத்திருந்ததாகவும், தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், அவனது நண்பர்களை வைத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய வைத்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து தன்னை பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தப் பட்டதாகவும் கூறியுள்ளார். அசார் மற்றும் அவரது நண்பர் ஜீஷனும் பாதிக்கப்பட்ட அந்த சிறுமியை அடித்து உதைத்ததாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண், அசாரின் பிடியிலிருந்து தப்பி தனது சகோதரியின் வீட்டை அடைந்ததாகவும், அவரை அழைத்துக் கொண்டு காவல் நிலையம் வந்ததாகவும் கூறியுள்ளார்.

போலீசாரிடம் புகார் அளித்ததும், அது குறித்து கேள்விப்பட்ட அசார், ​​ஆசிட் தாக்குதல்களால் தன்னை அச்சுறுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் செய்தியாளரிடம் கூறியுள்ளார். இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது செப்டம்பர் 7 ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe