ஜனநாயகப் படுகொலை: செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்ட பூஷண், யாதவ்

Published:

yogendra-yadav-prashant-bhushan புது தில்லி: எங்களை தேசிய செயற்குழுவில் இருந்து நீக்கியது ஜனநாயகப் படுகொலை என்று ஆவேசத்துடன் கூறினர் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களான பிரசாந்த் பூஷண், யோகேந்த்ர யாதவ் இருவரும். யோகேந்திர யாதவ் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தேசிய நிர்வாகக் குழுவில் நடந்த வாக்கெடுப்பு மோசடியானது. முன் கூட்டியே தீர்மானத்தை ரகசியமாகத் தயாரித்து வைத்து நிறைவேற்றியுள்ளனர். திட்டமிட்டு ஜனநாயகப் படுகொலை நடந்துள்ளது. ஆம் ஆத்மியில் உள்கட்சி ஜனநாயகம் இல்லை. எங்களை ஆதரித்தவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்” என்றார் ஆவேசத்துடன். பிரசாந்த் பூஷண் இதுகுறித்துக் கூறுகையில், நான் செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்டது சட்ட விரோதமானது. கூட்டத்துக்கு குண்டர்களை அழைத்து வந்து எங்களின் ஆதரவாளர்களைத் தாக்கினார்கள். இந்த கூட்டமே முழுவதும் சட்ட விரோதமான ஒன்றுதான் என்றார். முன்னதாக, ஆம்ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழுவில் இருந்து பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் இருவரும் இன்று காலை நடைபெற்ற கவுன்சில் கூட்டத்தில் அதிரடியாக நீக்கப்பட்டனர். இவர்களுடன் யோகேந்திர யாதவ் ஆதரவாளர்களான ஆனந்த குமார், அஜித் ஷா இருவரும் நீக்கப்பட்டனர். இதனால் கோபமடைந்த யோகேந்திர யாதவும், பிரசாந்த் பூஷணும் கூட்டத்தை விட்டு வெளியேறினர்.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img