மாணவனைக் கண்டித்த ஆசிரியர்! ஆசிரியரை உதைத்த பெற்றோர்!

school 1 - 2026

வகுப்புக்குள் நுழைந்து மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆசிரியரை சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்தில், ஆஷாதீப் என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, ஆசியராகப் பணியாற்றி வந்தவர் விபுல் கஜேரா. இவர் கடந்த செவ்வாய் கிழமை அன்று, 12 ஆம் வகுப்பு மாணவனை அடித்ததாக் கூறப்படுகிறது. அதனால், நேற்று வகுப்புக்குள் நுழைந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆசிரியரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர்.

அவரது வகுப்பு மாணவன் ஒருவன் கழிப்பறையில் ஒழுங்கீனமாக கத்திக் கொண்டு இருப்பதாக அவரிடம் புகார் அளித்துள்ளனர். அப்படி, நடந்து கொண்டதற்காக ஆசிரியர் மாணவனை முதலில் கண்டித்துள்ளார். பின்னர், மாணவன் பதிலுக்கு எதையோ கூற ஆசிரியர் கஜேரா மாணவரை அடித்துள்ளார்.

gujarat sch - 2026

மாணவர் வீட்டுக்குச் சென்றவுடன் தனது பெற்றோரிடம் ஆசிரியர் அடித்ததாகக் கூறியுள்ளார். பின்னர், பள்ளிக்கு வந்த மாணவனின் பெற்றோர் மற்றும் அவர்களது உறவினர்கள் வகுப்புக்குள் நுழைந்து ஆசிரியர் கஜேராவை சரமாரியாகத் தாக்கினர்.

இதுகுறித்து ஆசிரியர் தரப்பும் மாணவன் தரப்பும் ஒருவர் மீது ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து ஆஷாதீப் பள்ளிக்கு ஆசிரியர்கள் வர மறுத்துள்ளதாகத் பள்ளி நிர்வாகத் தரப்பினர் கூறியுள்ளனர்.

தற்போது இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் இருதரப்பினரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories