சுஷ்மா ஸ்வராஜின் கடைசி ஆசையை நிறைவேற்றிய அவரது மகள்!

sushma daughter harish salve - 2026

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜின் கடைசி ஆசையை அவரது மகள் நிறைவேற்றி வைத்துள்ளார். இது குறித்த செய்தி வெளியான போது, பலரும் நெகிழ்ச்சியுடன் அந்தச் சம்பவத்தை தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி உடல்நலக் குறைவால் முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உயிரிழந்தார். அவர் காலமாவதற்கு சிறிது நேரத்துக்கு முன்னர், குல்பூஷண் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடிய வழக்குரைஞர் ஹரிஸ் சால்வேயிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர், மிகச் சிறந்த வரலாற்றுப் பூர்வமான வெற்றியை தது வாதத்திறனுக்காகப் பெற்றுத் தந்த ஹரீஷ் சால்வேக்கு தாம் வழக்குக்கான தொகையைத் தருவதாகக் கூறியிருந்தார்.

சுஷ்மா ஸ்வராஜ் காலமான போது, இந்த நிகழ்வு குறித்து ஹரிஸ் சால்வே நெகிழ்ச்சியாக கூறியிருந்தார்.

அப்போது அவர் ” அந்த சந்திப்பு மிகவும் உணர்வுபூர்வமான ஒன்று. ஆகஸ்ட் 6ஆம் தேதி அவரை சந்தித்த போது, அவர் எனக்குத் தர வேண்டிய ஒரு ரூபாய் கட்டணத்தை தாமே நேரில் வந்து தர வேண்டும் என்று கூறி தனது விருப்பத்தைத் தெரிவித்தார். ஆனால், அதை நானே தங்களது வீட்டுக்கு வந்து வாங்கிக் கொள்கிறேன் என நான் கூறினேன்.

அப்படியானால் சரி… மறு நாள் காலை ஆறு மணிக்கு வந்து வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறினார் சுஷ்மா ஸ்வராஜ். ஆனால் அன்று இரவே சுஷ்மா ஸ்வராஜ் காலமாகிவிட்டார். அவரது கரத்தால் நான் பெற இருந்த உயரிய மதிப்பு மிக்க அந்தப் பரிசு கிடைக்காமல் போய்விட்டது என்று தனது வருத்தத்தைத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சுஷ்மா சுவராஜால், ஹரிஸ் சால்வேவிற்கு தர இயலாமல் போன ஒரு ரூபாய் கட்டணத்தை சுஷ்மா சுவராஜின் மகள் பன்சூரி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து சுஷ்மா ஸ்வராஜின் கணவர் ஸ்வராஜ் கௌசல் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருக்கிறார். அதில்,“சுஷ்மா ஸ்வராஜின் கடைசி ஆசையை பன்சூரி நிறைவேற்றியுள்ளார். அவர் ஹரிஷ் சால்வேயை அழைத்து குல்பூஷண் ஜாதவ் வழக்கிற்கான அவருடைய கட்டணமான ஒரு ரூபாயை அளித்தார்” எனப் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

Entertainment News

Popular Categories