December 6, 2025, 5:13 AM
24.9 C
Chennai

சரக்கு அடிக்க ரூவா கேட்டு… அம்மையின் கண்முன்னே அப்பனை ஏறி மிதித்த மகன்!

kerala liquor son beating father - 2025

தமிழகத்தில் ஆண்ட மற்றும் ஆளும் கட்சிகளின் நபர்கள் தயாரித்து விற்கும் மது பாட்டில்களை வாங்கி, சில்லறைக்கு விற்பனை செய்து வரும் அரசின் டாஸ்மாக் கடைகளால் இளைய சமுதாயம் பெரும் சீரழிவுக்கு உள்ளாகி வருகிறது என்ற குற்றச்சாட்டு வெகு காலமாகவே உண்டு.

இந்தப் பட்டியலில் இந்தியாவின் முழு கல்வி அறிவு பெற்ற மாநிலம் என்று மார்தட்டிக் கொள்ளும் கேரளமும் விதிவிலக்காக இருக்கவில்லை!

மது குடித்தல் உடல் நலத்துக்கும் மன நலத்துக்கும் கேடு என்று பிரசாரம் மட்டுமே செய்து வருகின்றனர். ஆனால், அதற்கு முன் மதுவையும் நீட்டி விடுகின்றனர். மது குடித்தால் சிறுமூளை செயலிழந்து விடும் என்றும், தன்னுணர்வு இழந்த நிலையில், மனிதன் குற்றச் செயல்களைப் புரிகிறான் என்றும் அறிவியல் ரீதியாகக் கூறப் படுகிறது. ஆனாலும், மது குடிப்போர் தமிழகம், புதுவை மற்றும் கேரளத்தில் அதிகரித்தே வருகின்றனர்.

கேரளத்தில் மது வாங்க பணம் கேட்டு, தனது தந்தையை மகன் ஒருவர் அடித்து, மிதித்து கீழே தள்ளி தாக்கும் வீடியோ ஒன்று டிவிட்டர் பதிவுகளில் வைரலாகி வருகிறது. தனது தாயின் கண் முன்பே தந்தையை அடிக்கும் மகனின் செயலைக் கண்டு, டிவிட்டர் வாசிகள் அதிர்ச்சி அடைந்து கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், மாநிலத்துக்கு பெருமளவிலான வருவாய் மது விற்பனை மூலம் மட்டுமே கிடைக்கும் போது, அரசுகளும் இது போன்ற சம்பவங்களைக் கண்டுகொள்வதில்லை என்று குற்றம் சாட்டப் படுகிறது. கேரள அரசு, தாங்கள் கொடுத்த உறுதிமொழியின் படி மாநிலத்தில் மது விற்பனையை கட்டுப் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகின்றனர் சமூக ஆர்வலர்கள். இளைய சமுதாயம் முன்னேற வேண்டுமானால், மது விற்பனையை கட்டுப் படுத்த வேண்டும் என்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories