பிச்சைக்காரன் வீட்டில் பண மூட்டைகள்! குடும்பத்தை தேடி ராஜஸ்தான் செல்லும் போலீசார்! ஏன் தெரியுமா?
மும்பையில் வெள்ளிக்கிழமை காலமான ஒரு பிச்சைக்காரனின் வீட்டை சோதனையிடச் சென்ற போலீசார் அங்கிருந்த பண மூட்டைகளைப் பார்த்து வியந்து போயினர்.
அவன் வீட்டில் கிடைத்த நாணயங்களை எண்ணுவதற்கு சுமார் 8 மணி நேரம் பிடித்ததாம்.
அதுமட்டுமல்ல அவனுக்கு பேங்க் பேலன்ஸ் கூட மிக அதிக அளவில் காணப்பட்டதால் அந்த தொகையை அவனுடைய குடும்பத்தாரிடம் சேர்க்கும் வேலையில் உள்ளனர் காவல்துறையினர்.
ரயில்வே போலீசார் தெரிவித்த விவரங்களின்படி… மும்பை ‘கோவண்டி’ பகுதியில் வசிக்கும் பிர்பாசந்த் அஜாத் என்பவர் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தார்.
அண்மையில் வெள்ளிக்கிழமை இரவு அவர் கோவண்டி ஸ்டேஷன் அருகே ரயில்வே தண்டவாளத்தைக் கடக்கும் போது விபத்து நேர்ந்தது. ரயில் மோதி இறந்து போனார்.
ரயில்வே போலீசார் அங்கிருந்த தள்ளுவண்டிக் காரர்களின் உதவியுடன் இறந்தவரின் விவரங்களை சேகரித்து அவர் வீட்டை சோதனையிட்டனர்.
வீட்டிற்கு சென்ற ஜிஆர்பி அதிகாரிகள் அவனுடைய வருமானத்தைப் பார்த்து வியந்து போயினர்.
கட்டப்பட்டிருந்த முட்டைகளில் சுமார் 1.5 லட்சத்துக்கு மேல் சில்லரை வெளிப்பட்டது. அதனை எண்ணுவதற்கு அவர்களுக்கு 8 மணி நேரம் பிடிப்பதாக தெரிவித்திருந்தார்கள்.
அதோடுகூட பிக்சட் டெபாசிட்கள் ரூபாய் 8 லட்சத்து 77 ஆயிரம் இருந்ததைக் கண்டு மலைத்தனர்.
அங்கே கிடைத்த அவனுடைய ஆதார் கார்டு பான் கார்டு சீனியர் சிடிசன் கார்டுகளின் ஆதாரத்தைக் கொண்டு அஜாத் ராஜஸ்தானைச் சேர்ந்தவன் என்று அறிந்து கொண்டனர்.
அவனுடைய குடும்பத்தைக் கண்டுபிடித்து அவர்களிடம் பணத்தை ஒப்படைப்பதற்காக போலீசார் ராஜஸ்தான் சென்றுள்ளனர்.