December 5, 2025, 11:24 PM
26.6 C
Chennai

5 மாநில சட்டசபை தேர்தல்: தேதியை அறிவித்தார் தேர்தல் ஆணையர்

புது தில்லி: உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தில்லியில் இன்று அறிவித்தார்.

செய்தியாளர்களிடம் இன்று பேசிய நஜீம் ஜைதி, 5 மாநிலங்களில் மொத்தம் 690 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 5 மாநிலங்களிலும் மொத்தம் 16 கோடி வாக்காளர்கள் உள்ளனர். உத்தரபிரதேசத்தில் 403 தொகுதிகளும், பஞ்சாபில் 117 தொகுதிகளும், உத்தரகாண்டில் 70 தொகுதிகளும், கோவாவில் 40 தொகுதிகளும், மணிப்பூரில் 60 தொகுதிகளும் உள்ளன. 1,85,000 வாக்கு மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

•கோவா, பஞ்சாப் மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 4ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று நஜீம் ஜைதி தெரிவித்தார்.

•உத்தரகாண்ட் மாநிலத்துக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 15ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவித்தார்

•மணிப்பூரில் மார்ச் 4ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெறும் என்றும் மார்ச் 8ல் 2ம் கட்ட தேர்தல் நடைபெறும் என்றும் நஜீம் ஜைதி அறிவித்தார்

•மிக அதிக அளவில் சட்டசபை தொகுதிகளைக் கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 11,15,19, 23, 27, மார்ச் 4, 8 ஆகிய தேதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

•5 மாநிலங்களிலும் பதிவாகும் வாக்குகள் மார்ச் 11ஆம் தேதி எண்ணப்படும் என்றும் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி அறிவித்தார். முன்னதாக பேசிய அவர், மின்னணு முறையில் தபால் வாக்குகளை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.

ராணுவத்தினர் இணையதளம் மூலம் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் மாநிலத்தில் வேட்பாளர்கள் ரூ.28 லட்சம் வரை தேர்தலுக்கு செலவழிக்கலாம் என்று தெரிவித்தார்.

மேலும் கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் வேட்பாளர்கள் ரூ.20 லட்சம் மட்டும் செலவழிக்கலாம் எனவும் அறிவித்தார்.

மேலும் தேர்தல் முடிந்து 30 நாட்களுக்குள் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள், கட்சிகளின் தேர்தல் செலவு இணையதளம் மூலம் கண்காணிக்கப்படும் என்றும் நஜீம் ஜைதி கூறினார்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories