5 மாநில சட்டசபை தேர்தல்: தேதியை அறிவித்தார் தேர்தல் ஆணையர்

புது தில்லி: உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தில்லியில் இன்று அறிவித்தார்.

செய்தியாளர்களிடம் இன்று பேசிய நஜீம் ஜைதி, 5 மாநிலங்களில் மொத்தம் 690 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 5 மாநிலங்களிலும் மொத்தம் 16 கோடி வாக்காளர்கள் உள்ளனர். உத்தரபிரதேசத்தில் 403 தொகுதிகளும், பஞ்சாபில் 117 தொகுதிகளும், உத்தரகாண்டில் 70 தொகுதிகளும், கோவாவில் 40 தொகுதிகளும், மணிப்பூரில் 60 தொகுதிகளும் உள்ளன. 1,85,000 வாக்கு மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

•கோவா, பஞ்சாப் மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 4ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று நஜீம் ஜைதி தெரிவித்தார்.

•உத்தரகாண்ட் மாநிலத்துக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 15ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவித்தார்

•மணிப்பூரில் மார்ச் 4ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெறும் என்றும் மார்ச் 8ல் 2ம் கட்ட தேர்தல் நடைபெறும் என்றும் நஜீம் ஜைதி அறிவித்தார்

•மிக அதிக அளவில் சட்டசபை தொகுதிகளைக் கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 11,15,19, 23, 27, மார்ச் 4, 8 ஆகிய தேதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

•5 மாநிலங்களிலும் பதிவாகும் வாக்குகள் மார்ச் 11ஆம் தேதி எண்ணப்படும் என்றும் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி அறிவித்தார். முன்னதாக பேசிய அவர், மின்னணு முறையில் தபால் வாக்குகளை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.

ராணுவத்தினர் இணையதளம் மூலம் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் மாநிலத்தில் வேட்பாளர்கள் ரூ.28 லட்சம் வரை தேர்தலுக்கு செலவழிக்கலாம் என்று தெரிவித்தார்.

மேலும் கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் வேட்பாளர்கள் ரூ.20 லட்சம் மட்டும் செலவழிக்கலாம் எனவும் அறிவித்தார்.

மேலும் தேர்தல் முடிந்து 30 நாட்களுக்குள் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள், கட்சிகளின் தேர்தல் செலவு இணையதளம் மூலம் கண்காணிக்கப்படும் என்றும் நஜீம் ஜைதி கூறினார்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories