ஒரே பாதையில்… இரு ரயில்கள் ‘நேருக்கு நேர்’! 30 பேர் காயம்!

kachikuda express train hits - 2026

ஆந்திராவில் ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் எதிரெதிரே வந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 30 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியானது. தவறான சிக்னல் காரணமாக ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள் வந்துள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியானது.

புறநகர் ரயிலும் – எக்ஸ்பிரஸ் ரயிலும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. காச்சிகூடா ஹந்த்ரி எக்ஸ்பிரஸுடன் எம்எம்டிஎஸ் மோதியதில், 30 பேருக்கு மேல் காயம் ஏற்பட்டுள்ளது.

காச்சிகூட ‘நிம்போலி அட்டா’ வில் இன்று திங்கள் காலை ரயில் விபத்து நேர்ந்தது. எம் எம் டி எஸ் ரயிலும் ஹந்த்ரீ எக்ஸ்பிரஸ் ரயிலும் மோதிக்கொண்டன. தொழில்நுட்பக் கோளாறால் ஹந்த்ரீ எக்ஸ்பிரஸ் நின்றிருந்த ட்ராக்கில் பலக்நாமாவில் இருந்து செகந்திராபாத் செல்லும் எம் எம் டி எஸ் வேகமாக வந்ததால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

kachikuda express train hits1 - 2026

கர்னூலில் இருந்து சிகந்திராபாத் வரும் ஹந்திரீ எக்ஸ்பிரஸ் காச்சிகூடாவில் நின்றிருந்தது. அதனை கவனிக்காத எம்எம்டிஎஸ் அதன் மீது வந்து மோதியது. இந்த சம்பவத்தில் பாசஞ்சர் ரயில் எம் எம் டி எஸ் ரயில் இந்த இரண்டிலும் இருந்த பயணிகளும் காயமடைந்துள்ளனர்.

எக்ஸ்பிரஸை கவனிக்காமல் வேகமாக வந்த எம்எம்டிஎஸ் ரயில் நான்காவது பிளாட்பாரத்தில் நின்று இருந்த இன்டர்சிட்டி ரயில் மீது வந்து மோதியது. இதில் எம்எம்டிஎஸ் ரயிலின் 3 போகிகள் நசிங்கின. டிரைவர் மோசமாக காயமடைந்தார்.

ALSO READ:  சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

லோகோபைலட் சந்திரசேகர் இஞ்சினில் சிக்கிக் கொண்டார். அதை காரிகள் அவரை வெளியே எடுக்க முயற்சித்து வருகின்றனர். விபத்து நடந்த உடனேயே வந்த அதிகாரிகள் உதவி செயல்களில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை காச்சிகூடா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அந்த மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது.

இரண்டாவது ட்ராக்கில் செல்ல வேண்டிய ரயில் நாலாவது ட்ராக்கில் சென்றதால் நின்றிருந்த ரயில் மீது மோதியுள்ளது. இதனால் 6 பெட்டிகள் பக்கத்து டிராக்கில் போய் விழுந்தன.

காச்சிகூடாவிலிருந்து செல்ல வேண்டிய அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் அறிவித்தனர். எதிர்பாராத இந்த விபத்தால் எம்எம்டிஎஸ் பயணிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இரண்டு ரயில்களுக்கும் இடையே சிக்கிய லோகோ பைலட் “காப்பாற்றுங்கள்…! காப்பாற்றுங்கள்…!” என்று கூச்சலிட்ட குரல் அங்கிருந்த பலரையும் சோகமயமாக்கியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories