நாய்க்கு பிஸ்கட் போட்டா நன்றி காட்டும்! உங்களால கைகூட தட்ட முடியாதா?

IMG 20191125 WA0027 - 2026

நாய்க்கு பிஸ்கட் போட்டால் நன்றி காட்டும். உங்களால் கைகூட தட்ட முடியாதா? அமைச்சர் ‘தர்மான கிருஷ்ணதாஸ்’ விமர்சனம்.

‘மெகா ஜாப் மேளா’ தொடக்க விழாவில் பங்கேற்ற ஆந்திரப் பிரதேஷ் சாலை மற்றும் கட்டிடத் துறை அமைச்சர் தர்மான கிருஷ்ணதாஸ் செய்த விமர்சனத்தால் அங்கு வந்திருந்த இளைஞர்கள் வியப்பால் வாயடைத்துப் போயினர்.

இளைஞர்களை நாய்களோடு ஒப்பிட்டார் என்று எதிர்க்கட்சிகள் ஆத்திரமடைந்தன.

சாலை மற்றும் கட்டிடத் துறை அமைச்சர் தர்மான கிருஷ்ணதாஸ் மீண்டும் ஒருமுறை உளறி கொட்டினார்.

ஸ்ரீகாகுளம் மாவட்டம் நரசன்னபேட்டை யில் சனிக்கிழமை மெகா ஜாப் மேளா தொடக்க விழாவில் அமைச்சர் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் வேலையற்ற இளைஞர்களை உத்தேசித்து பேசிய பேச்சுக்களால் புயல் கிளம்பியது.

” ஒரு பிடி பச்சை புல் போட்டால் மாடு பால் கொடுக்கிறது. நாய்க்கு பிஸ்கட் போட்டால் விசுவாசத்தைக் காட்டுகிறது. செய்த உதவிக்கு மனிதன் நன்றியோடு இருக்க வேண்டும். இளைஞர்களுக்கு முதலமைச்சர் ஒய்எஸ் ஜகன் 4 லட்சம் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி உள்ள செய்தியை தெரிவித்தாலும் யாரும் கை கூட தட்டவில்லை. உங்களுடைய சிந்தனை போக்கு மாறவேண்டும்” என்று அமைச்சர் கிருஷ்ணதாஸ் விமர்சனம் செய்தார்.

ALSO READ:  தேர்தலில் வாக்களிக்க... சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

“முதல்வர் ஜெகன் இத்தனை நல்ல செயல்கள் செய்தாலும் கை தட்டாமல் அமர்ந்துள்ளீர்கள். ஒரு நியாயமான மனிதனுக்கு என்ன தேவை? உங்கள் கைதட்டல் உற்சாகம் தானே!” என்று வினவினார்.

ஒய்எஸ்ஆர்சிபி பதவிக்கு வந்த உடனே கிராம வாலென்டீர்கள், செயலக பணியிடங்கள் ஏற்படுத்தினார் என்று நினைவு படுத்தினார். இளைய தலைமுறைக்கு டிசிப்ளின் குறைந்துவிட்டது என்று குற்றம் சாட்டினார். அமைச்சரின் விமர்சனத்தால் அங்கே சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அரசாங்கத்தின் செயல்முறை பற்றி அமைச்சர் பேசிக்கொண்டிருந்தபோது சபையிலிருந்தவர்களிடமிருந்து உற்சாக வரவேற்பு கிடைக்காததால் அமைச்சர் அதிருப்தி வெளிப்படுத்தினார்.

ஆனால் தன் விமர்சனத்திற்கு அமைச்சர் விளக்கம் கூட அளித்தார். நாலு லட்சம் வேலை வாய்ப்பு ஏற்படுத்திய முதல்வர் ஜெகனிடம் இளைஞர்கள் விசுவாசத்தோடு இருக்க வேண்டும் என்றார்.

அந்த உத்தேசத்தில் தான் அவ்வாறு பேசியதாக தெரிவித்தார் .வேறு எந்த கெட்ட நோக்கத்தோடும் பேசவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தன் பேச்சை திரித்துக் கூறுகிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.

ALSO READ:  திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Entertainment News

Popular Categories