நாய்க்கு பிஸ்கட் போட்டா நன்றி காட்டும்! உங்களால கைகூட தட்ட முடியாதா?

IMG 20191125 WA0027 - 2026

நாய்க்கு பிஸ்கட் போட்டால் நன்றி காட்டும். உங்களால் கைகூட தட்ட முடியாதா? அமைச்சர் ‘தர்மான கிருஷ்ணதாஸ்’ விமர்சனம்.

‘மெகா ஜாப் மேளா’ தொடக்க விழாவில் பங்கேற்ற ஆந்திரப் பிரதேஷ் சாலை மற்றும் கட்டிடத் துறை அமைச்சர் தர்மான கிருஷ்ணதாஸ் செய்த விமர்சனத்தால் அங்கு வந்திருந்த இளைஞர்கள் வியப்பால் வாயடைத்துப் போயினர்.

இளைஞர்களை நாய்களோடு ஒப்பிட்டார் என்று எதிர்க்கட்சிகள் ஆத்திரமடைந்தன.

சாலை மற்றும் கட்டிடத் துறை அமைச்சர் தர்மான கிருஷ்ணதாஸ் மீண்டும் ஒருமுறை உளறி கொட்டினார்.

ஸ்ரீகாகுளம் மாவட்டம் நரசன்னபேட்டை யில் சனிக்கிழமை மெகா ஜாப் மேளா தொடக்க விழாவில் அமைச்சர் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் வேலையற்ற இளைஞர்களை உத்தேசித்து பேசிய பேச்சுக்களால் புயல் கிளம்பியது.

” ஒரு பிடி பச்சை புல் போட்டால் மாடு பால் கொடுக்கிறது. நாய்க்கு பிஸ்கட் போட்டால் விசுவாசத்தைக் காட்டுகிறது. செய்த உதவிக்கு மனிதன் நன்றியோடு இருக்க வேண்டும். இளைஞர்களுக்கு முதலமைச்சர் ஒய்எஸ் ஜகன் 4 லட்சம் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி உள்ள செய்தியை தெரிவித்தாலும் யாரும் கை கூட தட்டவில்லை. உங்களுடைய சிந்தனை போக்கு மாறவேண்டும்” என்று அமைச்சர் கிருஷ்ணதாஸ் விமர்சனம் செய்தார்.

“முதல்வர் ஜெகன் இத்தனை நல்ல செயல்கள் செய்தாலும் கை தட்டாமல் அமர்ந்துள்ளீர்கள். ஒரு நியாயமான மனிதனுக்கு என்ன தேவை? உங்கள் கைதட்டல் உற்சாகம் தானே!” என்று வினவினார்.

ஒய்எஸ்ஆர்சிபி பதவிக்கு வந்த உடனே கிராம வாலென்டீர்கள், செயலக பணியிடங்கள் ஏற்படுத்தினார் என்று நினைவு படுத்தினார். இளைய தலைமுறைக்கு டிசிப்ளின் குறைந்துவிட்டது என்று குற்றம் சாட்டினார். அமைச்சரின் விமர்சனத்தால் அங்கே சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அரசாங்கத்தின் செயல்முறை பற்றி அமைச்சர் பேசிக்கொண்டிருந்தபோது சபையிலிருந்தவர்களிடமிருந்து உற்சாக வரவேற்பு கிடைக்காததால் அமைச்சர் அதிருப்தி வெளிப்படுத்தினார்.

ஆனால் தன் விமர்சனத்திற்கு அமைச்சர் விளக்கம் கூட அளித்தார். நாலு லட்சம் வேலை வாய்ப்பு ஏற்படுத்திய முதல்வர் ஜெகனிடம் இளைஞர்கள் விசுவாசத்தோடு இருக்க வேண்டும் என்றார்.

அந்த உத்தேசத்தில் தான் அவ்வாறு பேசியதாக தெரிவித்தார் .வேறு எந்த கெட்ட நோக்கத்தோடும் பேசவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தன் பேச்சை திரித்துக் கூறுகிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories