December 5, 2025, 4:52 PM
27.9 C
Chennai

நாய்க்கு பிஸ்கட் போட்டா நன்றி காட்டும்! உங்களால கைகூட தட்ட முடியாதா?

IMG 20191125 WA0027 - 2025

நாய்க்கு பிஸ்கட் போட்டால் நன்றி காட்டும். உங்களால் கைகூட தட்ட முடியாதா? அமைச்சர் ‘தர்மான கிருஷ்ணதாஸ்’ விமர்சனம்.

‘மெகா ஜாப் மேளா’ தொடக்க விழாவில் பங்கேற்ற ஆந்திரப் பிரதேஷ் சாலை மற்றும் கட்டிடத் துறை அமைச்சர் தர்மான கிருஷ்ணதாஸ் செய்த விமர்சனத்தால் அங்கு வந்திருந்த இளைஞர்கள் வியப்பால் வாயடைத்துப் போயினர்.

இளைஞர்களை நாய்களோடு ஒப்பிட்டார் என்று எதிர்க்கட்சிகள் ஆத்திரமடைந்தன.

சாலை மற்றும் கட்டிடத் துறை அமைச்சர் தர்மான கிருஷ்ணதாஸ் மீண்டும் ஒருமுறை உளறி கொட்டினார்.

ஸ்ரீகாகுளம் மாவட்டம் நரசன்னபேட்டை யில் சனிக்கிழமை மெகா ஜாப் மேளா தொடக்க விழாவில் அமைச்சர் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் வேலையற்ற இளைஞர்களை உத்தேசித்து பேசிய பேச்சுக்களால் புயல் கிளம்பியது.

” ஒரு பிடி பச்சை புல் போட்டால் மாடு பால் கொடுக்கிறது. நாய்க்கு பிஸ்கட் போட்டால் விசுவாசத்தைக் காட்டுகிறது. செய்த உதவிக்கு மனிதன் நன்றியோடு இருக்க வேண்டும். இளைஞர்களுக்கு முதலமைச்சர் ஒய்எஸ் ஜகன் 4 லட்சம் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி உள்ள செய்தியை தெரிவித்தாலும் யாரும் கை கூட தட்டவில்லை. உங்களுடைய சிந்தனை போக்கு மாறவேண்டும்” என்று அமைச்சர் கிருஷ்ணதாஸ் விமர்சனம் செய்தார்.

“முதல்வர் ஜெகன் இத்தனை நல்ல செயல்கள் செய்தாலும் கை தட்டாமல் அமர்ந்துள்ளீர்கள். ஒரு நியாயமான மனிதனுக்கு என்ன தேவை? உங்கள் கைதட்டல் உற்சாகம் தானே!” என்று வினவினார்.

ஒய்எஸ்ஆர்சிபி பதவிக்கு வந்த உடனே கிராம வாலென்டீர்கள், செயலக பணியிடங்கள் ஏற்படுத்தினார் என்று நினைவு படுத்தினார். இளைய தலைமுறைக்கு டிசிப்ளின் குறைந்துவிட்டது என்று குற்றம் சாட்டினார். அமைச்சரின் விமர்சனத்தால் அங்கே சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அரசாங்கத்தின் செயல்முறை பற்றி அமைச்சர் பேசிக்கொண்டிருந்தபோது சபையிலிருந்தவர்களிடமிருந்து உற்சாக வரவேற்பு கிடைக்காததால் அமைச்சர் அதிருப்தி வெளிப்படுத்தினார்.

ஆனால் தன் விமர்சனத்திற்கு அமைச்சர் விளக்கம் கூட அளித்தார். நாலு லட்சம் வேலை வாய்ப்பு ஏற்படுத்திய முதல்வர் ஜெகனிடம் இளைஞர்கள் விசுவாசத்தோடு இருக்க வேண்டும் என்றார்.

அந்த உத்தேசத்தில் தான் அவ்வாறு பேசியதாக தெரிவித்தார் .வேறு எந்த கெட்ட நோக்கத்தோடும் பேசவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தன் பேச்சை திரித்துக் கூறுகிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories