என் பேச்சு தவறாக சித்திரிக்கப் பட்டுள்ளது: மன்னிப்பு கோரிய சாத்வி பிரக்யா தாக்குர்!

sadhvi pragya takkur - 2026

‘மஹாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேயை தேசபக்தர்’ எனக் கூறினார் என்று கூறி, காந்தியை அவமானப் படுத்திவிட்டதாக பாஜக., பெண் எம்.பி., சாத்வி பிரக்யா தாக்குர் மன்னிப்பு கோர வலியுறுத்தி அவையை எதிர்க்கட்சிகள் முடக்கிய நிலையில், இன்று காலை அவையில் தாம் அதற்காக மன்னிப்பு கோருவதாக அவர் கூறியுள்ளார்.

எஸ்.பி.ஜி., எனப்படும் சிறப்பு பாதுகாப்புப் படை திருத்த மசோதா குறித்து புதன்கிழமை மக்களவையில் விவாதம் நடந்தது. அப்போது, மஹாத்மா காந்தியைக் கொன்றது ஏன் என கோட்சே கூறியதை மேற்கோள் காட்டி, தி.மு.க. உறுப்பினர் ஆண்டிமுத்து ராஜா பேசினார்.

அந்த விவாதத்தில் குறுக்கிட்ட பிரக்யா தாக்குர், ‘தேசபக்தரை இத்தகைய உதாரணத்துக்கு மேற்கோள் காட்டக் கூடாது என்று கூறினார். இதற்கு எதிர்க் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. பிரக்யா தாக்குர் மன்னிப்பு கோராத வரை அவரை அவைக்குள் அனுமதிக்கக் கூடாது என்று அமளியில் ஈடுபட்டன.

இந்நிலையில் தமது கருத்து தவறாக திரித்துக் கூறப் பட்டுள்ளது என்று கூறி, சாத்வி பிரக்யா தாக்குர் இன்று மன்னிப்பு கோரினார்.

மக்களவையில் அவர் இது குறித்துப் பேசிய போது, நாடாளுமன்றத்தில் நான் பேசியது திரித்து கூறப்பட்டுள்ளது. நாட்டு விடுதலையில் மஹாத்மா காந்தியின் பங்களிப்பை நான் மதிக்கிறேன். எதிர்க்கட்சிகள் என்னை பலிகடா ஆக்கியுள்ளன. ராகுல் ஒரு பெண்ணை அவமதித்துள்ளார் என்று கூறினார்.

மேலும், என்னை தீவிரவாதி என குறிப்பிட்ட ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்! எந்த ஆதாரமும் இன்றி ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியது எனது கண்ணியத்தை பாதித்துள்ளது என்று பாஜக எம்பி பிரக்யா தாக்குர் கூறினார்.

இருப்பினும், பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வர விரும்பாத எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories