ராகுல் விரைவில் திரும்புவார்; தனியாக அல்ல; துணைவியுடன்: ஊடகப் பரபரப்பு

Published:

புது தில்லி: காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, விரைவில் வெளி உலகுக்கு தன்னைக் காட்டிக் கொள்வார். அவர் திரும்புவார், ஆனால் தனியாக அல்ல, தனது துணைவியுடன் என்று ஊடகங்களில் செய்திகள் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் சிறிது காலம் ஓய்வு எடுத்து ஒரு மாத காலத்துக்கும் மேலாக விடுப்பில் உள்ளார். ஆனால் அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவலை எவரும் வெளியிடவில்லை. இதனால், அவரை கண்டுபிடித்துத் தரும்படி பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. ஆனால், நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் வரும் ஏப்ரல் 19ம் தேதி புது தில்லியில் நடைபெறும் போராட்டத்தில் ராகுல் பங்கேற்பார் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அவர் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும், விரைவில் தனது துணைவியுடன் தில்லி திரும்ப இருப்பதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img