அந்த ‘ஒரே ஒரு வார்த்தை’… ஓபிஎஸ்., மகனை தூக்கி வைத்துக் கொண்டாடும் பாஜக., எம்பி.,க்கள்!

ravindranath - 2026ஒரே ஒரு முழக்கத்தால் ஒட்டு மொத்த அவையையும் பலத்த கைத்தட்டலுக்கு உட்படுத்தி, தன் பக்கம் ஈர்த்துவிட்டார் ஓபிஎஸ்.,சின் மகன் ரவீந்த்ரநாத்.

17ஆவது மக்களவைக்கான எம்.பி.க்களின் பதவிப் பிரமாணம், மக்களவையில் திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் நடைபெற்றது. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்பி.,க்களும் அப்போது பதவியேற்றுக் கொண்டனர். ஒவ்வொருவரும் தங்களது தாய்மொழியில் உறுதிமொழி ஏற்று, உறுப்பினராகப் பதவி ஏற்றுக் கொண்டனர்.

இதில், திமுக கூட்டணியைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலரும் பெரியார் வாழ்க, தமிழ் வாழ்க, கலைஞர் வாழ்க என்று அவரவருக்குத் தக்க முழக்கங்களை எழுப்பி சலசலப்பை ஏற்படுத்தினர்.

இறுதியில் தமிழகத்தில் இருந்து தேர்வான அதிமுக.,வின் ஒரே எம்பி.,யான தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ்ஸின் மகன் ரவீந்திரநாத் குமார், மற்ற தமிழக எம்பி.,க்களைப் போல் தமிழில் உறுதிமொழி கூறி பதவி ஏற்றுக் கொண்டார். அப்போது அவை ஆரவாரமின்றி அமைதியாக இருந்தது. ஆனால் அதிமுக., என்பதால், எம்ஜிஆர் வாழ்க, ஜெயலலிதா வாழ்க என்று முழக்கமிட்டார். அப்போதும் அமைதியாக இருந்தது அவை. .ஆனால், இறுதியில், வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் என மிகவும் உறுதியுடன் சத்தமிட்டு முழங்கிய போது, அவை ஆர்ப்பரித்தது.

பாஜக எம்பி.,க்கள் அனைவரும் அவருக்கு பலத்த கரவொலி எழுப்பி, அவரைப் பாராட்டி மகிழ்ந்தார்கள். ரவீந்திரநாத் இப்போது அனைவராலும் கவனிக்கப் படும் நபர் ஆகிவிட்டார்.

ஆனால், அதிமுக., என்ற கட்சியே, அகில இந்திய அதிமுக., என்று தேசியத்தை முன்னிறுத்தி பெயர் சூடிக் கொண்ட கட்சிதான்! மேலும், ஜெய் ஹிந்த் என்ற முழக்கத்தை முதன் முதலில் கொடுத்தவரும் ஒரு தமிழர்தான். அவர் பெயரே ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை என்பதுதான்!

தமிழகத்தின் தென்கோடிப் பகுதியான நாஞ்சில் மண்ணில் தோன்றிய செண்பகராமனின் ஜெய் ஹிந்த் முழக்கத்தைத்தான் பின்னாளில் வங்கத்துச் சிங்கம் சுபாஷ் பெற்றுக் கொண்டு, தம் இந்திய தேசிய ராணுவத்தின் முழக்கம் ஆக்கினார். அவருடன் தொடர்பு கொண்டு தமிழகத்தில் தீவிரப் பணி ஆற்றிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், ஜெய் ஹிந்த் முழக்கத்தை பரவலாக்கினார்.

தேவரின் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தில் பிறக்கும் ஒரு ஆண் குழந்தைக்காவதுசுபாஷ் என்றும் போஸ் என்றும் பெயர் சூட்டுவதும், ஜெய் ஹிந்த் என்று சொல்லிக் கொடுப்பதும் இன்றளவும் மரபாக இருந்து வருகிறது. எனவே ரவீந்திரநாத் முழக்கத்தில் எந்த வித ஆச்சரியமோ, கூடுதல் கவனிப்போ உள்நோக்கமோ இருக்க வாய்ப்பில்லை!

ஆனால் அவரது இயல்பு கோஷம் இன்று தமிழகத்தின் தனித்துவத்தை தேசிய அரங்கில் உயர்த்தியிருக்கிறது! இந்த நாட்டுக்கே தேசிய எண்ணத்தையும் முழக்கங்களையும் கொடுத்த புனித மண் இந்தத் தமிழ் மண் என்பதை நிறுவியிருக்கிறார் ரவீந்திரநாத்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories