கரூர்: கரூரை அடுத்த புலியூரில் வேன் மீது கல்லூரிப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மாணவிகளை ஏற்றிக்கொண்டு கல்லூரிக்குச் சொந்தமான பேருந்து ஒன்று திருச்சி – கரூர் நெடுஞ்சாலையில் சென்றது. அந்தப் பேருந்து சித்தலவாய் கிராமத்தை அடுத்த பொய்கை புதூர் அருகே வந்தபோது, எதிரே வந்த லோடு வேன் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பேருந்தில் பயணம் செய்த 17 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த லாலாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். காயம் அடைந்த அனைவரும் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கரூர் அருகே வேன் மீது கல்லூரிப் பேருந்து மோதி விபத்து: 3 பேர் பலி
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

