ஹைதராபாத் லேக் வ்யூ கெஸ்ட் ஹவுஸ் ஓஎஸ்டி.,யாக பிவி சிந்து: ஆந்திர அரசு உத்தரவு!

Published:

sindhu jagan - 2026

பிவி சிந்துவுக்கு 2018 டிசம்பர் 7 முதல் 2020 ஆகஸ்ட் 30 வரை ஆன் டூட்டி வசதி அளித்துள்ளதாக அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பேட்மிட்டன் ஸ்டார் பிவி சிந்துவுக்கு ஆந்திர மாநில அரசு ஹைதராபாத்தில் உள்ள லேக் வியூ கெஸ்ட் ஹவுஸில் சிறப்பு பணி அதிகாரியாக போஸ்டிங் அளித்துள்ளது. இதன்படி வெள்ளிக்கிழமை இரவு அரசின் தலைமைச் செயலர் நீலம் சாஹ்னி உத்தரவு பிறப்பித்தார்.

டெபுடி கலெக்டராக பயிற்சி காலம் முழுமை அடைந்த பின் போஸ்டிங் எதிர்பார்த்து இருந்தார். தற்சமயம் அங்கு காலியாக உள்ள அசிஸ்டென்ட் டைரக்டர் போஸ்டை ஓஎஸ்டி யாக அப்கிரேட் செய்து உள்ளார்கள்.

இதனை பரிசீலிக்கும்படி ப்ரோடோகால் டைரக்டருக்கு அரசு உத்தரவிட்டது. பிவி சிந்துவுக்கு 2018 டிசம்பர் 7 முதல் 2020 ஆகஸ்ட் 30 வரை ஆன் டூட்டி வசதி அளிப்பதாக அரசு உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

பேட்மிட்டன் விளையாட்டு வீராங்கனையான பிவி சிந்துவை டெபுடி கலெக்டராக சென்ற அரசாங்கம் நியமித்தது. நாளை முதல் வரும் ஆண்டு அக்டோபர் 30 வரை சிந்து விடுமுறையில் செல்கிறார்.

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தயாராகவும், கலந்து கொள்ளவும் வேண்டியிருப்பதால் ஆன் டூட்டியாக கணக்கில் கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஜெகனை சிந்து கோரினார். சிந்துவின் வேண்டுகோளின்படி அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img