வெங்காயத்தைத் திருடிச் சென்றவரை… கட்டிவைத்து உரித்த புதுச்சேரி மக்கள்!

onion theft - 2026

புதுச்சேரியில் வெங்காய மூட்டையை இருசக்கர வாகனத்தில் திருடிச்சென்றவரை கட்டி வைத்து உதைத்துள்ளனர். இந்தச் சம்பவம் இப்போது பரபரப்பாகப் பேசப் படுகிறது.

வெங்காய விலை இப்போது வெகு அதிகம். வெங்காய விலை உயர்வால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சென்னையில் வெங்காய விலை கிலோ ரூ.180 ஐ எட்டியுள்ளது. பெரிய ஷாப்பிங் கடைகளில் சுத்தப் படுத்தப் பட்டு ரூ.200க்கும் சென்று விட்டது.

புதுச்சேரியில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.140 ஐ எட்டியுள்ளது. வட மாநிலங்களில் பெய்த பலத்த மழையினால்வெங்காய உற்பத்தி பாதிக்கப் பட்டிருக்கிறது. இதனால் வெங்காய வரத்தும் மற்ற மாநிலங்களுக்கு குறைந்துள்ளது.

இந்நிலையில் புதுச்சேரியில் பெரிய அங்காடியான குபேர் அங்காடியை ஒட்டியுள்ள ரங்கபிள்ளை வீதியில் வேல்முருகன் என்பவர் கடந்த 25 ஆண்டுகளாக மொத்த காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.

சனிக்கிழமை இன்று அதிகாலை பெங்களூரில் இருந்து லாரி மூலம் வேல்முருகன் கடைக்கு வந்த வெங்காய மூட்டைகளை, தொழிலாளர்கள் இறக்கி வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் அங்கிருந்து ஒரு மூட்டை வெங்காயம் மாயமானது. இதனால் அதிர்ச்சியடைந்த வேல் முருகன் மற்றும் சக தொழிலாளர்கள் வலை வீசித் தேடினர்.

அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்து வெங்காய மூட்டை ஒன்றை கடத்திச் செல்ல முயன்றதைக் கண்டனர்.

அந்த நபரை அங்கிருந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் பிடித்துக் கட்டிவைத்து உதைத்தனர். அந்த நபர், ஐயங்குட்டிபாளையம், காந்தி திருநல்லூர் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பதும், முதலில் ஒரு வெங்காய மூட்டையை திருடிச் சென்று வீட்டில் வைத்த பின்னர் இரண்டாவது மூட்டையைத் திருடும் போது மாட்டிக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.

இதை அடுத்து அவரது வீட்டில் திருடிச் சென்று பதுக்கி வைத்திருந்த ஒரு மூட்டை வெங்காயத்தை மீட்டுக் கொண்டு வந்தனர். இது புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெங்காய விலை உயர்வு காரணமாகவே இத்தகைய திருட்டு நடந்திருப்பதாகவும், வெங்காய விலை சாதாரணமாக இருந்த நாட்களில் இவ்வாறு நடந்ததில்லை என்றும் வேல்முருகன் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Topics

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

Entertainment News

Popular Categories