போலீசாரின் பூட்சுகளை பாலிஷ் செய்து முத்தமிட்ட ஒய்சிபி எம்பி.,!

Published:

IMG 20191222 WA0011 - 2026

போலீசாரின் பூட்சுகளை பாலிஷ் செய்து முத்தமிட்ட ஒய்சிபி எம்பி.

தெலுங்குதேசம் முன்னாள் எம்பி ஜேசி திவாகர் ரெட்டி போலீசார் பற்றி பேசிய விமர்சனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒய்சிபி எம்பி ‘கோரண்ட்ல’ மாதவ் போலிசாரின் பூட்சுகளை துடைத்து முத்தமிட்டார்.

முன்னாள் தெலுங்கு தேசம் எம்பி ஜேசி திவாகர் ரெட்டி “போலீசாரைக் கொண்டு என் பூட்சுகளையும் நக்க வைப்பேன்” என்று பேசிய பேச்சுக்கு வினோதமாக எதிர்ப்பு தெரிவித்தார் ஒய்சிபி எம்பி.

செய்தியாளர்கள் எதிரில் போலிசாரின் பூட்சுகளுக்கு பாலிஷ் போட்டு அவற்றுக்கு முத்தம் கொடுத்தார். இவ்வாறு செய்வதில் பெருமை கொள்கிறேன் என்றும் தெரிவித்தார்.

நாட்டைக் காப்பதில் உயிரைக் கொடுத்து போராடும் போலீசாரை புகழ்ந்து பேசினார். ஜேசி திவாகர் ரெட்டியின் தரக்குறைவான பேச்சு குறித்து ஆத்திரமடைந்தார்.

தாய் ஜென்மம் அளிக்கிறாள்…. பாதுகாப்பாக இருக்கும் போலீசார் புனர் ஜென்மம் அளிக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றார் கோரண்ட்ல மாதவ்.

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

போலீசாரை என்ன பேசினாலும் பேசாமல் இருப்பார்கள் என்று எண்ணினாரா? போலீஸில் இருந்து வந்த எம்எல்ஏ, எம்பி கள் உள்ளனர் என்பதை மறக்கக்கூடாது. நானும் அப்படி வந்தே எம்பி ஆனேன்.

இனி ஜேசி திவாகர் ரெட்டியின் கதை முடிந்துவிட்டது. தேர்தலில் அவர் மகன் வேலை கூட முடிந்துவிட்டது. அனந்தப்புரம் மாவட்டத்தில் அமைதியும் பாதுகாப்பும் நிலவுகின்றன.

போலீசார் கவனத்தோடு பணியாற்றி வருகிறார்கள். இனியாவது ஜேசி வாயை கட்டுப்படுத்தி நடந்து கொள்ள வேண்டும் என்றார்.

திவாகர் ரெட்டியை கண்டிக்காமல் சந்திரபாபு நாயுடு வேடிக்கை பார்ப்பது வருத்தமளிக்கிறது என்றார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img