கன்மேன்கள் இல்லாம வெளியே வாங்க பார்க்கலாம்: போலீஸ் அதிகாரிகள் சங்கம்!

Published:

IMG 20191220 WA0011 - 2026

ஜெசி திவாகர் ரெட்டி ஒரு ஜோக்கர். கன்மேன்கள் இல்லாமல் வெளியே வாருங்கள்… பார்க்கலாம்… போலீஸ் அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை.

ஜேசி திவாகர் ரெட்டி மீது ஆத்திரம் அடைந்த போலீஸ் அதிகாரிகள் சங்கம்.

கன்மேன்கள் இல்லாமல் வெளியே வர முடியுமா என்பதே கேள்வி. முன்பு கூட இதே போல்தான் வாயில் வந்ததை பேசினார். இப்போது என்ன ஆயிற்று?…. போலீஸ் அதிகாரிகள் சங்கம்.

முன்னாள் எம்பி திவாகர் ரெட்டியின் பரபரப்பு பேச்சு குறித்து போலீஸ் அதிகாரிகள் சங்கம் ஆத்திரமடைந்து எரிந்து விழுந்தது.

“போலீசாரைக் கொண்டு என் பூட்சை நக்க வைப்பேன்” என்ற விமர்சனம் மீது தீவிரமாக கருத்து தெரிவித்தது போலீஸ் அதிகாரிகள் சங்கம்.

பூட்ஸ்களை யார் நக்கினார்கள் என்பது அனந்தபுரம் மாவட்டக்காரர்களுக்கு மட்டுமல்ல மாநிலம் முழுவதும் அனைவருக்கும் தெரியும் என்று ஸ்டிராங் பதிலடி கொடுத்தனர் போலீஸ் அதிகாரிகள்.

முன்பு கூட இதே போல் போலீஸ் பற்றிய வாயில் வந்ததை பேசினார். அதன் பலனை இப்போது அனுபவிக்கிறார். பதவி, வயது மறந்துவிட்டு பேசக்கூடாது என்றனர்.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

ஜேசி பெரிய மனிதத் தன்மையோடு நடந்து கொள்ள வேண்டும் என்றனர்.

எல்லோரும் ஜேசியை ஜோக்கர் போல் பார்க்கிறார்கள். அவருக்கு பயப்பட்ட காலம் போய்விட்டது. கன்மேன்களை விடுத்து அவர் வெளியே வர முடியுமா ? என்று கேள்வி எழுப்பியது போலீஸ் அதிகாரிகள் சங்கம்.

பல ஆண்டுகளாக போலீசார் தான் அவருக்கு பாதுகாப்பு அளித்து வருகிறார்கள் என்ற விஷயத்தை அவர் மறக்கக்கூடாது. ஜேசி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி அசோசியேஷன் தரப்பில் போராடுவோம் என்றனர் போலீஸ் அதிகாரிகள்.

திவாகர் ரெட்டி போலீஸ் குறித்து தரக்குறைவாகப் பேசிய போது அதே மேடையில் இருந்த சந்திரபாபு அவரை கண்டிக்காமல் இருந்தது வருத்தமளிக்கிறது. ஜேசி போலவே எங்களாலும் பேச முடியும். ஆனால் பெருந்தன்மையோடு இருக்கிறோம்.

போலீசுக்கு எந்த கட்சியுடனும் தொடர்பு கிடையாது என்பதை கவனிக்க வேண்டும் . திவாகர் ரெட்டி இப்போதாவது தன் நடவடிக்கையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று எச்சரித்தனர்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img