பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் போட்டா… பாகிஸ்தானுக்கே போயிடுங்க!

meerut sp an singh - 2026

பாகிஸ்தான் வாழ்க என்று கூச்சலிட்டதால் தான் அங்கேயே செல்லுங்கள் என்று நான் கூறினேன் என உத்திரபிரதேச காவல் அதிகாரி கூறியுள்ளார்

பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று போராட்டக் காரர்கள் சிலர் கத்தி கூச்சல் இட்டனர்; அதனால் அவர்களை பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்று நான் கூறினேன் என உத்திரபிரதேச காவல் அதிகாரி கூறியுள்ளார்!

உத்தரபிரதேசத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது. பொதுச் சொத்துகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது.

மீரட்டில் கடந்த 20ஆம் தேதி குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது இதையடுத்து அங்கு அமைதியை ஏற்படுத்த வந்த மீரட் மாவட்ட எஸ்பி அகிலேஷ் நாராயன் சிங் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தி கலைந்து செல்ல உத்தரவிட்டார்

அப்போது அவர் நீங்கள் சாப்பிடுவது இங்கே ஆனால் விரோதி நாட்டுக்கு புகழ் பாடுகிறார்கள் வேண்டுமென்றால் பாகிஸ்தானுக்கு சென்று விடுங்கள் உங்களுக்கு இருண்ட காலம் தொடங்கி விடும் இங்கே முழு சுதந்திரத்தை அனுபவித்து விட்டு அந்நாட்டுக்கு ஆதரவாக செயல்படாதீர்கள் என்று கூறினார்!

எஸ்பி அகிலேஷ் நாராயணி இந்த பேச்சு சமூக வலை தளங்களில் வீடியோவாக வைரலாக பரவியது. இந்த பேச்சுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கடும் கண்டனம் தெரிவித்தார்.

https://twitter.com/ianujagnihotri/status/1210850354583048192

இதுகுறித்து விளக்கம் அளித்த எஸ்பி போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கூச்சலிட்டனர். அதனால்தான் அவர்களை பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்று கூறினேன் என விளக்கமளித்தார்.

மீரட்டில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கூச்சலிட்டது உண்மைதான் என்பது தெரியவந்தது

இருப்பினும், அந்த அதிகாரிக்கு எதிராக ஊடகங்களும், எதிரகட்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் ஆதித்யநாத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

https://twitter.com/ram26chouhan/status/1211139445442826240

அரசுக்கு எதிரான கோஷங்களை போட்டபடி ஆர்பாட்டம் நடத்திய சிலர் வன்முறைகளிலும் ஈடுபட்டனர். போலீசார் ஏராளமான அளவில் குவிக்கப்பட்டிருந்த நிலையில் சிலர் போலீசார் மீது கல்வீச்சு சம்பவங்களிலும் ஈடுபட்டனர்.

ஆனால், இந்தியா முழுவதும் சர்ச்சையாக்கப்பட்டுள்ள இந்த அதிகாரியின் பேச்சு குறித்து மத்திய சிறுபான்மைத் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில் “ஒரு மாவட்ட போலீஸ் அதிகாரியே இவ்வாறு எப்படி பேசலாம், சம்பவம் உண்மையாக இருந்தால் மாநில அரசு உடனடியாக போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

மேலும் “இந்த போராட்டங்களின் மீது போலீசார் அளவுக்கு அதிகமாக அடக்குமுறை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதுவும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று குறிப்பிட்ட நக்வி அதே சமயம் போராட்டக்காரர்கள் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்வதும் ஏற்புடையதல்ல. இத்தகைய சம்பவங்கள் நிகழாமல் உ.பி. அரசு பார்த்துக் கொள்ள வேண்டும்” என்றார்.

ஆனால், இது குறித்து சர்ச்சையில் சிக்கிய போலீஸ் அதிகாரி கூறுகையில்: “அவர்கள் எங்களை பார்த்தவுடனேயே பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கூறினார்கள், அதற்கு நான் நீங்கள் அந்த நாட்டை மிகவும் நேசிக்கிறீர்கள் என்றால் அங்கு செல்லலாம் என்று தான் சொன்னேன் ” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories