ஐபிஎல்-லில் பிரகாசித்து இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன்: யுவராஜ் சிங் நம்பிக்கை

Published:

புது தில்லி: ஐபிஎல் போட்டிகளில் பிரகாசித்து, மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்தார் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங். இந்திய அணியின் ஆல் ரவுண்டராகத் திகழ்ந்தவர் யுவராஜ் சிங். 2011 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைத் தொடரில் தனது அதிரடி ஆட்டம் மூலம் பல வெற்றிகளை இந்திய அணிக்கு பெற்றுத் தந்தவர் யுவராஜ் சிங். மேலும் அந்தத் தொடரின் தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றவர். அப்போது, யுவராஜின் தந்தை, இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல யுவராஜே காரணம் என்றெல்லாம் பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இவ்வகையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய யுவராஜ் சிங்கை, புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டு அவரை கட்டிப் போட்டது. பின்னர் தகுந்த சிகிச்சை பெற்று, தற்போது முழுவதுமாக மீண்டுள்ளார். இந்நிலையில் ஐபிஎல் போட்டி குறித்து தில்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் யுவராஜ் சிங் பேசுகையில், புற்றுநோய் சிகிச்சைக்கு பின் தற்போது உடல் தகுதியுடன் நலமாக உள்ளேன். மேலும் வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் அசத்தல் ஆட்டத்தை வெளிபடுத்தி இந்திய அணிக்கு திரும்புவேன் என்றார். யுவராஜ் சிங்கை, டெல்லி டேர்டெவில்ஸ் அணி 16 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.

ALSO READ:  யுபிஐ கட்டணத்துக்கு வரியா? பரவும் வதந்தியும் அரசின் விளக்கமும்!

Related articles

Recent articles

spot_img