குடியுரிமைச் சட்டம் என்பது குடியுரிமை வழங்குவதற்குத்தான்; பறிப்பதற்கல்ல: மோடி!

Published:

modi vivekanandajayanthi1 - 2026

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) தொடர்பாக இளைஞர்கள் மற்றும் மக்களை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துகின்றன; குடியுரிமைச் சட்டம் என்பது, குடியுரிமையை வழங்குவதற்குத்தானே தவிர பறிப்பதற்கல்ல என்று பேசினார் பிரதமர் மோடி!

சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு கோல்கத்தாவில் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர், பிரதமர் மோடி ஹவுராவில் உள்ள பேலூர் மடத்தில் நடந்த விவேகானந்தர் ஜெயந்தி விழாவில் பேசினார்.

அப்போது அவர், துடிப்புமிக்க 100 இந்தியர்களை என்னிடம் தாருங்கள் இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன் என்று கூறிய சுவாமி விவேகானந்தரை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். மாற்றத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் ஆற்றலும் நமக்குள் இருக்க வேண்டும்.

குடியுரிமைச் சட்டம் என்பது, குடியுரிமை தருவதற்கே; பறிப்பதற்கு அல்ல என்பதை நான் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ALSO READ:  கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

சுதந்திரத்திற்குப் பின்னர் மகாத்மா காந்தி உள்ளிட்ட பெரிய தலைவர்கள், பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினருக்கு இந்தியா குடியுரிமை வழங்கும் என்று நம்பினார்கள். அதை நீங்கள் நன்றாக புரிந்து கொண்டுள்ளீர்கள். ஆனால் சிலர் அரசியல் விளையாட்டுக்காக அதை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்.

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக இளைஞர்களும், மக்களும் தவறாக வழிநடத்தப் படுகிறார்கள்.

குடியுரிமைச் சட்டம் குறித்து புரிந்து கொள்ள எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை. சிஏஏ விவகாரத்தில் பாகிஸ்தானின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது. உண்மையில் சிஏஏ என்பது, சிறுபான்மையினரை பாதுகாக்கக் கூடியது என்றார்.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img