அனுஷ்கா ஒரு புறம் இருந்தாலும், விராட் கோலியின் இதயம் இந்திய அணியின் வெற்றிக்காகவே துடித்துக் கொண்டிருக்கும் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் இயக்குநர் ரவி சாஸ்த்ரி. அனுஷ்காவால்தான் விராத் கோலியின் ஆட்டத் திறன் பாதிக்கப் பட்டதாகக் கூறுவதும் சரியல்ல என்று கூறும் அவர், விராத் கோலி சரியாக ஆடாததற்கு அனுஷ்கா சர்மாவைக் குறை சொல்வது சரியல்ல என்றும் கூறியுள்ளார். விராத் கோலி, முக்கியமான உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியில் சிறுபிள்ளைத் தனமாக விளையடி, பொறுப்பற்ற விதத்தில் ஆட்டம் இழந்து வந்ததை ரசிகர்கள் அதிருப்தியுடன் இப்போதும் கூறி வருகின்றனர். அவர் பல முக்கியப் போட்டிகளிலும் சரிவர ஆடவில்லை என்று ரசிகர்கள் பெரும் அதிருப்தியில்தான் உள்ளனர். இதற்கு, அவர் ஆட்டத்தில் கவனத்தை விடுத்து, அனுஷ்கா சர்மாவுடன் சுற்றுவதில் கவனம் செலுத்தியதுதான் காரணம் என்று கலாய்த்தும் வருகின்றனர். இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த ரவி சாஸ்த்ரி, அனுஷ்கா அருகில் இருப்பதால் கோலியின் ஆட்டம் ஒரு போதும் தடைப்பட்டதில்லை. ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின் போது கோலி எடுத்த 700 ரன்களில் 4 சதங்களும் அடங்கியிருக்கிறது. அவரது இதயம் எப்போதும் இந்திய வெற்றிக்காகத்தான் துடித்துக் கொண்டிருக்கிறது… என்றார்.
அனுஷ்கா இருந்தாலும் கோலியின் இதயம் இந்திய வெற்றிக்காகவே துடித்துக் கொண்டிருக்கும்: ரவி சாஸ்திரி
Popular Categories


