மத அறிவிப்புகளுக்கு… அவங்க வெள்ளி; இவங்க ஞாயிறு… அப்பாவி ஹிந்துக்களுக்குத்தான் நாள் கிழமை இல்லை!

SMC church - 2026

கேரளத்தில் திட்டமிட்டு செயல்படுத்தப் படும் லவ் ஜிஹாத் குறித்து இந்திய உச்ச நீதிமன்றம் வரையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு விட்டன. இந்த விவகாரங்களில் ஹிந்துப் பெண்கள் அதிகம் பாதிக்கப் பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் அப்போது கிறிஸ்துவ அமைப்புகள் பாதிரிகள் அமைதியாக வேடிக்கை பார்த்து வந்தனர் என்றும், தற்போது, கிறிஸ்துவ பாதிரிகளே லவ் ஜிஹாத்துக்கு கிறிஸ்துவ பெண்கள் இரையாகின்றனர் என்றும் குரல் எழுப்பி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனை தற்போது பெரும் பிரச்னையாக வெளி உலகுக்கு தெரியப் படுத்தியுள்ளது சைரோ மலபார் சர்ச். இதை அடுத்து, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில், கிறிஸ்தவ பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து, பயங்கரவாதிகளாக மாற்றும் சதித் திட்டம் அரங்கேற்றப்படுவதாக, சைரோ மலபார் சர்ச்சு அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கை, நேற்று கேரளாவில் உள்ள சர்ச்சுகளில் நடந்த ஞாயிற்றுக்கிழமை பிரார்த்னையின் போது வாசிக்கப்பட்டது.

கேரளாவில் உள்ள சைரோ மலபார் சர்ச், அண்மையில் வெளியிட்டிருந்த அறிக்கையில், கேரளாவிலும், மற்ற தென் மாநிலங்களிலும், அண்மைக் காலமாக, கிறிஸ்தவ பெண்களை காதல் வலையில் சிக்க வைக்கும் சம்பவங்கள் நடக்கின்றன.

இதில் சில பெண்கள், கொலை செய்யப் படுகின்றனர். ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள், கிறிஸ்தவ பெண்களை குறிவைத்து, அவர்களை பயங்கரவாதிகளாக மாற்றும் சதித் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகள், சமூகத்தின் ஒருமைப்பாட்டுக்கும், அமைதிக்கும் பேராபத்தை ஏற்படுத்தும்.

போலீசாரும் புலனாய்வு அமைப்பினரும் இதை மத ரீதியான பிரச்னையாக அணுகாமல், சட்டம் – ஒழுங்கு பிரச்னையாக கருதி சம்பந்தபட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்… என்று கூறப் பட்டிருந்தது.

இந்த அறிக்கை, சைரோ மலபார் சர்ச்சில் வாசிக்கப் பட்டது. கேரளாவின் எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சர்ச்களில், நேற்று நடைபெற்ற ஞாயிறு பிரார்த்தனைகளின் போது இந்த அறிக்கை வாசித்துக் காட்டப்பட்டது.

இசுலாமியர்கள் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது மத ரீதியான அறிவிப்புகளை வெளியிடுவதும், கிறிஸ்துவர்கள் இவ்வாறு ஞாயிறு பிரார்த்தனை கூடுதல்களின் போது அறிக்கைகள் வெளியிட்டு வாசித்துக் காட்டி, மத ரீதியான கட்டளைகளைப் பிறப்பிப்பதும் வாடிக்கையாக உள்ளது. அதே நேரம், ஹிந்துக்களுக்காக இது போன்று எந்த வித குறிப்பிட்ட நாளோ, அறிவிப்புகளோ, ஒருங்கிணைப்போ இல்லாததால், இந்த இரு வெளிநாட்டு மத அமைப்புகளின் தாக்குதல்களுக்கு எளிதில் இலக்காகி விடுகின்றனர் என்பது, தற்போது நடைபெற்று வரும் குடியுரிமைச் சட்ட திருத்த மசோதா போராட்டங்கள் வரையிலும் வெளித் தெரிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories