மத அறிவிப்புகளுக்கு… அவங்க வெள்ளி; இவங்க ஞாயிறு… அப்பாவி ஹிந்துக்களுக்குத்தான் நாள் கிழமை இல்லை!

SMC church - 2026

கேரளத்தில் திட்டமிட்டு செயல்படுத்தப் படும் லவ் ஜிஹாத் குறித்து இந்திய உச்ச நீதிமன்றம் வரையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு விட்டன. இந்த விவகாரங்களில் ஹிந்துப் பெண்கள் அதிகம் பாதிக்கப் பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் அப்போது கிறிஸ்துவ அமைப்புகள் பாதிரிகள் அமைதியாக வேடிக்கை பார்த்து வந்தனர் என்றும், தற்போது, கிறிஸ்துவ பாதிரிகளே லவ் ஜிஹாத்துக்கு கிறிஸ்துவ பெண்கள் இரையாகின்றனர் என்றும் குரல் எழுப்பி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனை தற்போது பெரும் பிரச்னையாக வெளி உலகுக்கு தெரியப் படுத்தியுள்ளது சைரோ மலபார் சர்ச். இதை அடுத்து, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில், கிறிஸ்தவ பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து, பயங்கரவாதிகளாக மாற்றும் சதித் திட்டம் அரங்கேற்றப்படுவதாக, சைரோ மலபார் சர்ச்சு அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கை, நேற்று கேரளாவில் உள்ள சர்ச்சுகளில் நடந்த ஞாயிற்றுக்கிழமை பிரார்த்னையின் போது வாசிக்கப்பட்டது.

கேரளாவில் உள்ள சைரோ மலபார் சர்ச், அண்மையில் வெளியிட்டிருந்த அறிக்கையில், கேரளாவிலும், மற்ற தென் மாநிலங்களிலும், அண்மைக் காலமாக, கிறிஸ்தவ பெண்களை காதல் வலையில் சிக்க வைக்கும் சம்பவங்கள் நடக்கின்றன.

ALSO READ:  ஒரு துரதிர்ஷ்டவசமான பிரதமர்

இதில் சில பெண்கள், கொலை செய்யப் படுகின்றனர். ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள், கிறிஸ்தவ பெண்களை குறிவைத்து, அவர்களை பயங்கரவாதிகளாக மாற்றும் சதித் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகள், சமூகத்தின் ஒருமைப்பாட்டுக்கும், அமைதிக்கும் பேராபத்தை ஏற்படுத்தும்.

போலீசாரும் புலனாய்வு அமைப்பினரும் இதை மத ரீதியான பிரச்னையாக அணுகாமல், சட்டம் – ஒழுங்கு பிரச்னையாக கருதி சம்பந்தபட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்… என்று கூறப் பட்டிருந்தது.

இந்த அறிக்கை, சைரோ மலபார் சர்ச்சில் வாசிக்கப் பட்டது. கேரளாவின் எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சர்ச்களில், நேற்று நடைபெற்ற ஞாயிறு பிரார்த்தனைகளின் போது இந்த அறிக்கை வாசித்துக் காட்டப்பட்டது.

இசுலாமியர்கள் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது மத ரீதியான அறிவிப்புகளை வெளியிடுவதும், கிறிஸ்துவர்கள் இவ்வாறு ஞாயிறு பிரார்த்தனை கூடுதல்களின் போது அறிக்கைகள் வெளியிட்டு வாசித்துக் காட்டி, மத ரீதியான கட்டளைகளைப் பிறப்பிப்பதும் வாடிக்கையாக உள்ளது. அதே நேரம், ஹிந்துக்களுக்காக இது போன்று எந்த வித குறிப்பிட்ட நாளோ, அறிவிப்புகளோ, ஒருங்கிணைப்போ இல்லாததால், இந்த இரு வெளிநாட்டு மத அமைப்புகளின் தாக்குதல்களுக்கு எளிதில் இலக்காகி விடுகின்றனர் என்பது, தற்போது நடைபெற்று வரும் குடியுரிமைச் சட்ட திருத்த மசோதா போராட்டங்கள் வரையிலும் வெளித் தெரிகிறது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

Entertainment News

Popular Categories