உருவானது ’மாருதா’ புயல்: தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு

Published:

சென்னை:

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‛‛ மாருதா” புயலால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தமான் அருகே வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலை கொண்டிருந்தது. அது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, பின் இன்று அதிகாலை 2.30 மணிக்கு புயலாக மாறியுள்ளது. இந்தப் புயலுக்கு மாருதா என பெயரிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வரும் நிலையில் மக்கள் மழையை எதிர்பார்த்து காத்துள்ளனர். ஆனால் இந்தப் புயலால் தமிழகத்திற்கு பெரிய அளவில் மழை இருக்காதுஎன்றாலும், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related articles

Recent articles

spot_img