December 6, 2025, 3:07 AM
24.9 C
Chennai

அரசியலுக்கு வர தயாராகும் விவிஐபி

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா தனது மகனுக்கு கண்ணில் ஏற்பட்ட கோளாறை சரி செய்ய தமிழகத்துக்கு ரகசியமாக வந்து சென்றார். அதன் பிறகு குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக விடுமுறையை கொண்டாட ராஜஸ்தானில் உள்ள தேசிய ரந்தம்போர்க் பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு சென்றார். 
அந்த மகிழ்ச்சியுடன் ஊருக்கு திரும்பிய பிரியங்கா மிக நெருக்கமான குடும்ப நண்பர்கள், பிரபல ஆங்கில நாளிதழின் ஆசிரியர் ஆகியோரை அழைத்து தேநீர் விருந்து கொடுத்தார். 
அப்போது ராகுலின் அரசியல் தலைமை மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும் விரைவில் அவர் கட்சித் தலைமையை ஏற்று, 2019 மக்களவை தேர்தலை ராகுல் தலைமையில் எதிர்கொள்ள  அனைவரும் ஆதரவு தர வேண்டும் என பிரியங்கா கேட்டுக் கொண்டிருக்கிறார். அதன் பிறகும் உரிய முடிவுகள் வராவிட்டால் முழு நேர அரசியலுக்கு வருவது பற்றி முடிவெடுப்பதாக பிரியங்கா அளித்த தகவல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 
ஆனால், கூடுதலாக அவர் தெரிவித்த மற்றொரு தகவல் தேநீர் விருந்தில் பங்கேற்றவர்களுக்கு புறையைத் தட்டி விட்டதாம். 
தனது கணவரும் பிரபல தொழிலதிபருமான ராபர் வாத்ராவும் அரசியலுக்கு விரும்புவதாகவும் அவரை உ.பி. மொரதாபாத் தொகுதியில் களமிறக்க பரிசீலித்து வருவதாகவும் பிரியங்கா கூறியிருக்கிறார். 
இந்த கூட்டம் முடிந்த கையோடு தில்லி கான் மார்கெட்டில் உள்ள ஹோட்டலுக்கு சென்ற அந்த குடும்ப நண்பர்கள், "இதுவரை காங்கிரஸ் சோதனை காலத்தில் இருந்ததாக நினைத்தோம். ஆனால், உண்மையான சோதனையே இனி தான் வரப்போகிறது என்று கடுப்புடன் கவலையை பகிர்ந்து கொண்டார்களாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories