December 6, 2025, 4:49 AM
24.9 C
Chennai

நீண்ட ஆயுளுடன் வாழ தேரையர் அறிவுரைகள்

காடு,  மலைகளில்  வாழ்ந்த  சித்தர்கள்  நூற்றாண்டுகளை  கடந்தும்   வாழ்தார்கள்.  நோய்கள் அவர்கள்   அருகே  வர   அஞ்சியது.  தங்கள்  ஆயுள்  ரகசியத்தை அவர்கள்  சொல்லி  இருந்தாலும்,  நாம்  தான்  அதன்படி  வாழ மறுக்கிறோம்.  18  சித்தர்களில்  ஒருவரான  தேரையார்  எப்படி  வாழ  வேண்டும்  என்பதை  ஒரு  பட்டியலே  இடுகிறார்.
மனிதன்  எதை  மட்டும்  செய்ய  வேண்டும்  என்பதற்கு   அவர்  இப்படி  சொல்கிறார் :
  •  பால்  உணவு  உட்கொள்ளுங்கள்.
  • எண்ணெய்   தேய்த்து  குளிக்கும்போது   வெந்நீரில்   குளியுங்கள்.
  • படுக்கும்போது   எப்போதும்  இடது  கைப்புறமாகவே   ஒருக்களித்து  படுங்கள்.
  • புளித்த  தயிர்  உணவை   விருப்பி   உட்கொள்ளுங்கள்.
  • பசிக்கும்போது   மட்டுமே  உணவை  உட்கொள்ளுங்கள்.
  • ஒரு  நாளைக்கு  இரண்டு  முறை  மட்டுமே  உணவு  உட்கொள்ள     வேண்டும்.
  • இரவில்  நன்றாக  தூங்குங்கள்.
  • பெண்ணுடன்   மாதம்  ஒருமுறை  மட்டுமே  உறவு  வைத்துக்கொள்ள  வேண்டும்.
  • வாழைக்காயை   உணவுக்கு  பயன்படுத்தும்போது   பிஞ்சிக்  காய்களை        மட்டுமே   பயன்படுத்த  வேண்டும் .  முற்றிய  காய்களை  கறி  சமைத்து        உண்ணக்கூடாது.
  • உணவு   உட்கொண்ட  உடனேயே  சிறிது  தூரம்   நடக்கும்   பயிற்சியை   செய்ய    வேண்டும்.
  • 6   மாதத்திற்கு  ஒருமுறை   வாந்தி  மருந்து  உட்கொள்ள  வேண்டும்.
  • 4   மாதங்களுக்கு  ஒருமுறை   பேதி  மருந்து  சாப்பிடுங்கள்.
  • 1 1/2  மாதத்திற்கு  ஒருமுறை   மூக்கிற்கு  மருந்திட்டு  சளி  போன்ற  நோய்கள்   வராமல்  பார்த்துக்  கொள்ளுங்கள்.
  • வாரம்  ஒருமுறை  முகச்சவரம்  செய்துகொள்ள   வேண்டும். ( இது  ஆண்களுக்கு  மட்டும்  )
  • 4  நாட்களுக்கு  ஒருமுறை   எண்ணெய்  தேய்த்து  குளிக்க  வேண்டும்.
  • 3  நாட்களுக்கு   ஒருமுறை   கண்ணுக்கு  மை  இட  வேண்டும். (பெண்களுக்கு மட்டும்)
  • விரும்பிய  தெய்வங்கள்,  குருவை  வணங்குங்கள்.
இவற்றை   எல்லாம்  ஒருவர்  தனது  வாழ்நாளில்  பின்பற்றி  வந்தால்  எமன்
அவரை   நெருங்கி  வரவே  பயப்படுவான்   என்கிறார்  தேரையார்.
எவற்றை  எல்லாம்  செய்யக்கூடாது  என்பதற்கு   தேரையாரின்   அறிவுரை :
  • பகலில்  உடலுறவு  கொள்வதையும்,  தூங்குவதையும்  தவிர்த்து  விடுங்கள்.
  • கரும்பு  போன்ற  இனிப்பவர்களாக  இருந்தாலும்  வயதில்  மூத்த பெண்களுடனும்  இனிய  வாசம்  தரும்  தலைமுடியைக்  கொண்ட  விலைமாதர்களுடன்  உடலுறவு  கொள்ளாதீர்கள்.
  • காலை  இளம்  வெயிலில்  அலையாதீகள்.
  • மலம்,  சிறுநீர்  போன்றவற்றை  அடக்கி  வைத்திருக்காதீர்கள்.
  • முதல்  நாள்  சமைத்த  கறி  உணவு,  அமுதம்  போன்று  இருந்தாலும்  அதை  மறுநாள்   உண்ணவேண்டாம்.
  • உலகமே  பரிசாக  கிடைக்கிறது  என்ற  போதும்,  பசிக்காத  போது  உணவு  உட்கொள்ளாதீர்கள்.
  • உணவு  உட்கொள்ளும்போது  தாகம்  அதிகம்  எடுத்தாலும்,  இடைஇடையே  தண்ணீர்   குடிக்கக்கூடாது.
  • மயக்கும்   மனம்   வீசும்  கந்தம்,  மலர்கள்  போன்றவற்றை   நள்ளிரவு    நேரத்தில்    நுகரக்கூடாது  .
  • மாத  விலக்கான  பெண்கள்,     ஆடு, கழுதை  போன்றவை   வரும்  பாதையில்  எழும்   புழுதி  உடல்மேல்   படும்படி  நெருங்கி   நடந்து  செல்லாதீர்கள்.
  • இரவில்,  விளக்கு  வெளிச்சத்தில்   நிற்பவர்   நிழலிலும்,  மர  நிழலிலும்  நிற்பதை  தவிர்த்திடுங்கள்.
  • பசியின்  போது   உணவு   உட்கொண்ட  உடனேயும்   உடலுறவு   வைத்துக்கொள்ளாதீர்கள்.
  • மாலை  நேரத்தில்  தூங்குதல்,  உணவு  உட்கொள்ளுதல்,  அளவுக்கு  மீறிய   காமச்  செயல்களில்  ஈடுபடுதல்,  அழுக்கான  ஆடை   அணிந்திருத்தல்,  தலையை  வாரி  முடி   உதிரச்செய்தல்   போன்ற  செயல்களில்  ஈடுபடாதீர்கள்.
  • மற்றவர்கள்  கை  உதறும்போது  அவர்களது   நகத்திலிருந்து  விழும்  தண்ணீரும்,  குளித்து  தலை  துவட்டும்  போது  உதிரும்  தண்ணீரும்   மேலே  தெரித்து விழும்  இடத்தில்  நடக்காதீர்கள்.
-இப்படி  சொல்கிறார்  அவர்.
தேரையார்   சித்தர்  கூறிய  அனைத்தையும்  ஒரே  நாளில்  பின்பற்றுவது   என்பது  இயலாத  காரியம்.  ஏனென்றால்,  நாம்  இப்போது   வாழ்ந்து  கொண்டிருக்கிற   வாழ்க்கை   அப்படி.  அதனால்,  படிப்படியாக   முயற்சிப்போம்.  நோய்,  நொடியின்றி   நாளும்   நலத்தோடு   வாழ்வோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories