ஐ.நா.வில் நீண்ட உரையாற்றியவர் கிருஷ்ணமேனன். ஐ.நா., பாதுகாப்பு மன்றத்தில், இந்தியாவின் பிரதிநிதியாக வி.கே.கிருஷ்ணமேனன் 1957இல் காஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவின் உரிமை குறித்து ஒரு நீண்ட உரையை ஆற்றினார். தனது உரையின் முதல் நாள் 5 மணிநேரமும், மறுநாள் 3 மணி நேரமும் பேசியது; இந்த உரை தான் உலகளவில் ஐ.நா.வில் இதுவரை ஆற்றியதில் நீண்ட உரை என இன்று வரை நினைவுகூரப்படுகிறது.
இந்தியாவின் பாதுகாப்புத் துறையின் முன்னாள் அமைச்சராகவும், நீண்ட காலம் நாடாளுமன்ற உறுப்பினராகவும், நேருவின் நெருங்கிய சகாவாகவும் விளங்கினார். இந்த அரிய புகைப்படம் 1957இல் ஐ.நா. சபைக்கு உரையாற்ற வந்தபோது எடுக்கப்பட்டது. கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகில் யாரும் புரிந்து கொள்ளாத அளவில் வி.கே.மேனன் சாலை என்று பெயர் பலகையை பார்த்தேன்.
இதை குறித்தும் இரண்டாண்டுகளுக்கு முன்பாக ஒரு பதிவையும் செய்துள்ளேன். கோவைக்கும் வி.கே.கிருஷ்ணமேனனுக்கும் தொடர்புகள் இருந்தது. வி.கே.கிருஷ்ணமேனனின் ஆளுமையை தெரியாதவர்கள் இன்றைக்கு அதிகாரவர்க்கத்தில் இருக்கிறார்கள்.
#UN #V_K_Krishnamenon #Kashmir_Problem #ஐநாசபை #விகேகிருஷ்ணமேனன்
#காஷ்மீர்_சிக்கல்
– கே.எஸ்.இராதாகிருஷ்ணன்