சுரங்கத்தை ஏலம் விட்டதில் கிடைத்த தொகை எங்கே போனது? : காங்கிரஸுக்கு மோடி கேள்வி

Published:

Narendra-Modi-SAIL ரூர்கேலா: நிலக்கரிச் சுரங்கத்தை ஏலம் விட்டத்தில் கிடைத்த பணம் எங்கே என்று பிரதமர் மோடி காங்கிரஸுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் ரூர்கேலா உருக்காலையின் ரூ.12 ஆயிரம் கோடி விரிவாக்க திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், [su_quote]முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் விடப்பட்ட நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. அதன் பின்னர் எங்கள் அரசு நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விட்டது. இதில், .20 சுரங்கங்களை ஏலம் விட்டதற்கே ரூ.2 லட்சம் கோடி கிடைத்துள்ளது. நிலக்கரி இப்போது வைரமாக மாறி விட்டது. இந்தப் பணத்தை மத்திய அரசுக் கருவூலத்தில் சேர்க்க மாட்டோம். ஏலம் விடப்பட்ட சுரங்கங்கள் அமைந்துள்ள மாநில அரசுகளுக்கே அளிப்போம். அந்த வகையில், ஒடிசா மாநிலத்துக்கு இப்பணம் கிடைக்கும். இந்தப் பணத்தை நீண்டகால வளர்ச்சித் திட்டங்களுக்கு மாநிலம் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில், நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு மூலம் ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி கூறியதை நான் ஆரம்பத்தில் நம்பாமல் இருந்தேன். ஆனால், 20 சுரங்கங்களுக்கே ரூ.2 லட்சம் கோடி கிடைத்த பிறகுதான், தணிக்கை அதிகாரியின் அறிக்கையை நம்பினேன். முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில், 206 நிலக்கரி சுரங்கங்களின் ஒதுக்கீடு மூலம் கிடைத்த பணம் எங்கே போனது? 20 சுரங்கங்களை ஏலம் விட்டதிலேயே எங்களால் எப்படி ரூ.2 லட்சம் கோடி திரட்ட முடிந்தது? இதற்கெல்லாம், அப்போது பதவியில் இருந்த காங்கிரஸ் தலைவர்கள் பதில் அளிக்க வேண்டும். நாங்கள் ஒளிவுமறைவின்றி செயல்படுவதால், ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. எங்கள் ஆட்சியில் ஊழல் இல்லை. நேர்மையிலும், ஒளிவுமறைவு இன்மையிலும் நாங்கள் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். கடந்த 10 மாத கால எங்களது ஆட்சியில், எவ்வித நிதி முறைகேடுகளோ, ஊழல்களோ நடக்கவில்லை… [/su_quote]என்றார்.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

Related articles

Recent articles

spot_img