காஷ்மீரில் பயங்கரவாதிகள் கைவரிசை: பாதுகாப்புப் படை வீரர்கள் 2 பேர் பலி

Published:

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட சண்டையில் 2 பாதுகாப்புப் படை வீரர்கள் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தின் கன்ஜிர் கிராமத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த தகவலை அடுத்து, ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீஸ் அடங்கிய பாதுகாப்புப் படை கிராமத்திற்கு விரைந்தது. கிராமத்தை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்த பின்னர், பாதுகாப்புப் படையினர், பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கே மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி சுட்டனர். இதில் காவலர் ஒருவரும் ராணுவ வீரர் ஒருவரும் உயிரிழந்தனர். ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியது. இதனிடையே அந்தப் பகுதியிலிருந்து பயங்கரவாதிகள் தப்பி ஓடினர். இதை அடுத்து, அப்பகுதியில் ராணுவம் கூடுதலாகக் குவிக்கப்பட்டு, பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர்

Related articles

Recent articles

spot_img