தன் அரசுத் திட்டங்களை நிதிஷ் ரத்து செய்ததை எதிர்த்து மாஞ்சி உண்ணாவிரதம்

Published:

jitan-ram-manjhiபாட்னா: தன் அரசுத் திட்டங்களை தற்போதைய முதல்வர் நிதிஷ் குமார் ரத்து செய்ததைக் கண்டித்து முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி உண்ணாவிரதம் மேற்கொண்டார். பீகாரில் ஜித்தன் ராம் மாஞ்சி முதலமைச்சராக இருந்த போது, 34 புதிய சலுகைகளை அறிவித்து இருந்தார். நிதிஷ் குமார் மீண்டும் முதலமைச்சராகப் பதவி ஏற்றதும், மாஞ்சி அரசு ஒப்புதல் அளித்திருந்த 34 சலுகை திட்டங்களையும் ரத்து செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஜிதன் ராம் மாஞ்சி, பாட்னா காந்தி மைதானத்தில் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவருடைய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த முன்னாள் அமைச்சர்களும் அவருடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் மாஞ்சியின் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆம் ஆத்மி கட்சியினர் போல் காந்தி குல்லாவுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், மாஞ்சி அரசு எடுத்த முடிவுகளில் விதிமுறைகள் சரிவர பின்பற்றப் படவில்லை என்று நிபுணர்கள் கூறியதாலேயே அந்தத் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாக நிதிஷ்குமார் கூறியுள்ளார். அதே நேரம், முதல்வர் நிதிஷ் குமார் மாநிலத்தின் நிதியை தேவையில்லாமல் ஆடம்பரச் செலவு செய்வதாகவும், வளர்ச்சிக்காக நிதியைப் பயன்படுத்துவதில்லை என்றும் மாஞ்சி குற்றம் சாட்டியுள்ளார்.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

Related articles

Recent articles

spot_img