பாகிஸ்தானில் தயாரான 14 குண்டுகள் கேரளத்தில் கண்டெடுப்பு!

kulathoopuzha bullets - 2026

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் குளத்துப்புழவில் பாகிஸ்தானில் தயாரான குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கேரளாவில் உள்ள கொல்லம் மாவட்டத்தில் தமிழக எல்லையை ஒட்டிய தென்மலை, குளத்துப்புழா அருகே ஒருபாலத்தின் அருகில் பாகிஸ்தானில் தயாரான POF என்று குறிக்கப்பட்ட உயிரோட்டமுள்ள 14 துப்பாக்கி குண்டுகளை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்..! இவை அதிக தொலைவு குறிபார்த்து சுடும் துப்பாக்கிகளில் பயன்படுத்தக் கூடியவை என்பதும், அவற்றில் பிஓஎஃப் என்று குறிக்கப்பட்டிருப்பதும் போலீஸாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பிஓஎஃப் என்பது பாகிஸ்தான் ஆர்டனன்ஸ் ஃபேக்டரி என்பதும், இவை அனைத்தும் பாகிஸ்தானில் தயாராகி இங்கே கொண்டு வரப்பட்டவை என்பதும் போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சனிக்கிழமை இரவு இதனை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். இந்த குண்டுகள் வந்தது எப்படி என்று போலீஸார் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து மாநில காவல் துறைத் தலைவர் லோகநாத் பெஹரா கூறிய போது, இந்த விவகாரம் குறித்து பயங்கரவாத எதிர்ப்புப் படையிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. அவர்கள் விசாரணை நடத்துவர். அந்தப் பகுதியில் பைக்கில் சென்ற இருவர் பாலத்தின் அருகே சாலை ஓரத்தில் ஒரு மூடிய கவரில் இதனைக் கண்டு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த குண்டுகள் தொலை நோக்கி துப்பாக்கிகளில் பயன்படுத்தக் கூடிய 7.62 மிமி குண்டுகள் என்றார்.

CAA வுக்கு எதிரான போராட்டங்களை இஸ்லாமிய அமைப்புகள் மேற்கொண்டு வரும் நிலையில், வெடிகுண்டுகள் கண்டெடுக்கப் பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளத்தில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இண்டியா உள்ளிட்ட அடிப்படைவாத அமைப்புகளின் பயங்கரவாதச் செயல்களை கேரள முதல்வர் பிணராயி விஜயன் கண்டித்துப் பேசியுள்ளார்.

ALSO READ:  தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

குமரி மாவட்டம் களியக்காவிளையில் சோதனைச்சாவடியில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் கேரளத்தில் இருந்து தொடர்பில் இருந்து ஆயுதக் கடத்தலில் ஈடுபடும் போது சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சனை சுட்டுக் கொன்றுள்ளனர்.

இந்த நிலையில், பாகிஸ்தானுடன் தொடர்பில் உள்ள இந்திய இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள் துப்பாக்கிகள் குண்டுகளுடன் கடத்தலில் ஈடுபடுவதும், அவற்றைக் கொண்டு, தற்போதைய போராட்ட சூழ்நிலையை பயன்படுத்தி எத்தகைய நிலைக்கும் சென்று விடுவார்கள் என்பதையும் குறிப்பிட்டு தங்களது அச்சத்தை தெரிவிக்கின்றனர் பலர்.

போராட்ட சூழலைப் பயன்படுத்தி ஏதேனும் அசம்பாவிதத்தை இந்த அடிப்படைவாதிகள் நிகழ்த்தி, பழியை அரசின் மீதும் காவல்துறையின் மீதும் போடுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு என்பதால், தாய்நாடு மீதான ஏதேனும் ஒரு உணர்வு இருந்தால், தாங்கள் மாறிக் கொள்ள கடைசி வாய்ப்பு நடுநிலை வாதிகளுக்கு என்று கருத்து தெரிவிக்கின்றனர் சமூகத் தளங்களில்!

கேரளம் அடுத்த ஒரு காஷ்மீராக மாறிக் கொண்டு வருகிறது என்பதும், தமிழகத்துக்குள் ஏற்கெனவே இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தங்களது வேலைகளைச் செய்து வருவதால், இஸ்லாமிய சமூகம் மிக கவனமாக இருக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர் பலர்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories