கிருஷ்ணரை அவமதித்த கவிஞருக்கு விருதா? குருவாயூர் தேவஸ்வம் போர்டுக்கு இந்து ஐக்ய வேதி எதிர்ப்பு!

hindu aikya vedi protest - 2026
pic: Janam tv

கிருஷ்ணரை தனது கவிதையில் அவமதிக்கும் கவிஞருக்கு விருது அறிவித்ததற்காக குருவாயூர் தேவஸ்வம் வாரியத்திற்கு எதிராக இந்து ஐக்ய வேதி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கவிஞர் பிரபா வர்மாவுக்கு ஞானபானா விருதை வழங்க முடிவு செய்துள்ள குருவாயூர் தேவஸ்வம் போர்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்து ஐக்ய வேதி அமைப்பு ஊர்வலம் நடத்தியது. பொதுவான பக்தர்களின் நம்பிக்கைகளை சிதறடிப்பதன் மூலம் கிருஷ்ணரை மோசமாக சித்தரித்த கவிஞருக்கு மதிப்புமிக்க ஞானபானா விருது வழங்கப்படுவதற்குத்தான் இந்த எதிர்ப்பு!

குருவாயூர் தேவஸ்வம் போர்ட் தலைவருக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து ஐக்ய வேதி போராட்டத்தை நடத்தியது. கம்யூனிஸ்ட் கட்சிக்கு அவர் செய்த சேவைகளுக்காக பிரபா வர்மாவுக்கு இந்த விருது வழங்கப்பட்டதாக ஐக்கிய வேதி கூறியுள்ளது. தேவஸ்வம் தலைவர் பதவி விலக வேண்டும் என்று இதற்காக அந்த அமைப்பு கொடி பிடித்துள்ளது.

பிரபா வர்மாவின் கவிதையில் பகவத்கீதையை வழங்கியதற்காக பகவான் கிருஷ்ணர் வருத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், பாண்டவர்களின் மனைவியான பஞ்சாலி மீது கிருஷ்ணருக்கு ரகசிய ஏக்கம் இருந்தது என்று அவர் எழுதுகிறார். அவரது கவிதை முழுதும் அபத்தம் என்கிறார்கள். சியாமளா மாதவனான பகவானை ’ஷ்யாமா மாதவ்’ என்ற கவிதையில் இத்தகைய அறுவெறுப்பான கருத்துகளால் நிறைத்திருக்கிறார் இந்தக் கவிஞர்.

பிரபா வர்மாவுக்கு விருது வழங்குவதற்கான முடிவை எதிர்த்து தபஸ்ய கலா வேதியும் வெளியில் வந்துள்ளார். இதுபோன்ற ஒரு கவிதைக்கு விருது வழங்குவது கிருஷ்ணரை புகழ்ந்து பேசும் ஞானபானா எழுதிய கிருஷ்ண பக்தரான பூந்தானத்தை அவமதிப்பதாகும் என்று அந்த அமைப்பு கூறியது.

இருப்பினும், ஷ்யாமா மாதவ் என்ற கவிதை இறைவன் மீது பக்தி நிறைந்ததாக குருவாயூர் தேவஸ்வம் போர்டு கூறி வருகிறது. இதன் மூலம் குருவாயூர் தேவஸ்வம் போர்டு பெரும் விமர்சனத்தைச் சந்தித்து வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories