கிருஷ்ணரை அவமதித்த கவிஞருக்கு விருதா? குருவாயூர் தேவஸ்வம் போர்டுக்கு இந்து ஐக்ய வேதி எதிர்ப்பு!

hindu aikya vedi protest - 2026
pic: Janam tv

கிருஷ்ணரை தனது கவிதையில் அவமதிக்கும் கவிஞருக்கு விருது அறிவித்ததற்காக குருவாயூர் தேவஸ்வம் வாரியத்திற்கு எதிராக இந்து ஐக்ய வேதி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கவிஞர் பிரபா வர்மாவுக்கு ஞானபானா விருதை வழங்க முடிவு செய்துள்ள குருவாயூர் தேவஸ்வம் போர்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்து ஐக்ய வேதி அமைப்பு ஊர்வலம் நடத்தியது. பொதுவான பக்தர்களின் நம்பிக்கைகளை சிதறடிப்பதன் மூலம் கிருஷ்ணரை மோசமாக சித்தரித்த கவிஞருக்கு மதிப்புமிக்க ஞானபானா விருது வழங்கப்படுவதற்குத்தான் இந்த எதிர்ப்பு!

குருவாயூர் தேவஸ்வம் போர்ட் தலைவருக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து ஐக்ய வேதி போராட்டத்தை நடத்தியது. கம்யூனிஸ்ட் கட்சிக்கு அவர் செய்த சேவைகளுக்காக பிரபா வர்மாவுக்கு இந்த விருது வழங்கப்பட்டதாக ஐக்கிய வேதி கூறியுள்ளது. தேவஸ்வம் தலைவர் பதவி விலக வேண்டும் என்று இதற்காக அந்த அமைப்பு கொடி பிடித்துள்ளது.

பிரபா வர்மாவின் கவிதையில் பகவத்கீதையை வழங்கியதற்காக பகவான் கிருஷ்ணர் வருத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், பாண்டவர்களின் மனைவியான பஞ்சாலி மீது கிருஷ்ணருக்கு ரகசிய ஏக்கம் இருந்தது என்று அவர் எழுதுகிறார். அவரது கவிதை முழுதும் அபத்தம் என்கிறார்கள். சியாமளா மாதவனான பகவானை ’ஷ்யாமா மாதவ்’ என்ற கவிதையில் இத்தகைய அறுவெறுப்பான கருத்துகளால் நிறைத்திருக்கிறார் இந்தக் கவிஞர்.

பிரபா வர்மாவுக்கு விருது வழங்குவதற்கான முடிவை எதிர்த்து தபஸ்ய கலா வேதியும் வெளியில் வந்துள்ளார். இதுபோன்ற ஒரு கவிதைக்கு விருது வழங்குவது கிருஷ்ணரை புகழ்ந்து பேசும் ஞானபானா எழுதிய கிருஷ்ண பக்தரான பூந்தானத்தை அவமதிப்பதாகும் என்று அந்த அமைப்பு கூறியது.

இருப்பினும், ஷ்யாமா மாதவ் என்ற கவிதை இறைவன் மீது பக்தி நிறைந்ததாக குருவாயூர் தேவஸ்வம் போர்டு கூறி வருகிறது. இதன் மூலம் குருவாயூர் தேவஸ்வம் போர்டு பெரும் விமர்சனத்தைச் சந்தித்து வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Entertainment News

Popular Categories