பாலியல் தொல்லை தந்த சாமியாரின் ஆணுறுப்பை அறுத்த இளம்பெண்: கேரளத்தில் பரபரப்பு

 

கொல்லம்:
கடந்த ஏழெட்டு அண்டுகளாக பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்து வந்த சாமியாரின் ஆணுறுப்பை 21 வயது இளம்பெண் ஒருவர் அறுத்துவீசினார். இந்தச் சம்பவம் கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள பன்மனா ஆசிரமத்தைச் சேர்ந்த சாமியார் கணேசானந்தா, திருவனந்தபுரம் அருகே உள்ள பேட்டா என்ற பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண்ணை நேற்றிரவு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயன்றபோது, அந்தப் பெண், சாமியாரின் ஆண் உறுப்பை அறுத்துள்ளார்.

ரத்தம் பீறிடவே, சாமியாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விசாரணையில், சாமியார் இளம்பெண்ணின் வீட்டுக்கு நீண்ட காலமாக வந்து செல்பவர் என்றும், இளம்பெண் 16 வயது சிறுமியாக இருந்தபோதிலிருந்தே, அவரை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து 8 ஆண்டுகளாக அந்தப் பெண்ணிடம் சாமியார் பல முறை அத்துமீறியிருப்பதும், இளம்பெண்ணின் தாயாரும் அந்த சாமியாருக்கு உடந்தை என்பதும் போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.

சாமியாருக்கும் அந்தப் பெண்ணின் தாயாருக்கும் பழக்கம் இருந்ததும், தாயாரைப் பார்க்க வந்த சாக்கில் பெண்ணிடமும் சபலப்பட்டிருப்பதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்தப் பெண்ணை 16 வயதில் இருந்தே வன் கொடுமைக்கு ஆளாக்கியதால், சிறார்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களை தடுக்கும் போஸ்கோ சட்டத்தின் கீழ் சாமியார் மீதும் இளம்பெண்ணின் தாயார் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே இந்தச் சம்பவத்தைக் குறித்து கருத்து தெரிவித்துள்ள கேரள முதல்வர் பினரயி விஜயன், அந்தப் பெண்ணின் செயல் மிகவும் தைரியமான செயல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories