ஜோதிர் ஆதித்யாவைத் தொடர்ந்து 10 ஆயிரம் நிர்வாகிகள் பாஜக.,வில்!

madhyapradesh bjp - 2026

சிந்தியாவை தொடர்ந்து மத்திய பிரதேசத்தில் 10,000 காங்கிரஸ் நிர்வாகிகள் பா.ஜ.க-வில் இணைந்தனர் !

மத்திய பிரதேச மாநில அரசியலில் மிகவும் செல்வாக்கான குடும்பம் ஜோதிராதித்யா சிந்தியாவின் குடும்பம். வரலாற்று சிறப்பு பெற்ற குவாலியர் அரண்மனையில் இருந்து ஆட்சி செய்த மன்னர் வம்ச குடும்பமாகும். பிரிட்டிஷாரை எதிர்த்து வரலாற்றில் பேசப்படும் ‘மராத்தா போர்கள்’ புரிந்தவர்கள். இவரின் பாட்டியான இராஜமாதா என அழைக்கப்படும் விஜய ராஜே சிந்தியா பா.ஜ.க-வை தோற்றுவித்த மூத்த தலைவர் ஆவார். அவர் பா.ஜ.க. சார்பில் 5 முறை குவாலியர் தொகுதியில் இருந்து தொடர்ச்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இவருடைய தந்தை மாதவராவ் சிந்தியா மாநில காங்கிரஸ் தலைவராகவும் பல முறை எம்.பி. யாகவும், நரசிம்மராவ் ஆட்சியின் போது விமான போக்குவரத்து துறை அமைச்சராகவும் இருந்தார்.

கடந்த 2002-ஆம் ஆண்டு விமான விபத்தில் உயிர் இழந்தார். அதன் பிறகு, ஜோதிராதித்யா சிந்தியா மாநில காங்கிரஸ் பிரமுகரானாலும், மேற்கொண்டு அவரால் காங்கிரசில் வளர முடியவில்லை. ஆந்திராவில் ராஜசேகர ரெட்டி மறைவுக்குப் பின் ஜெகன் மோகன் ரெட்டியை சோனியா காந்தி வளர விடாமல் செய்தார். இதற்கு காரணம் தங்கள் குடும்பத்தினரை தவிர வேறு யாரும் நாட்டில் வாரிசு அடிப்படையில் வளரக் கூடாது என அவர் நினைத்தார் என கூறப்பட்டது. இதனால் ஆந்திராவில் காங்கிரஸ் கட்சி இழுத்து மூடக்கூடிய அளவு வந்துவிட்டது.

அதே போல மத்திய பிரதேசத்திலும் மாதவராவ் சிந்தியாவின் மரணத்துக்கு பிறகு அவரது மகனாகிய ஜோதிராதித்ய சிந்தியாவையும் வளர்க்க சோனியாவுக்கும், ராகுலுக்கும் மனம் இல்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரஸிலிருந்து விலகிய பின்னர் அவரது ஆதரவளர்களான 22 எம்.எல்.ஏ க்களும் வெளியேறி பா.ஜ.க- வில் இணைந்துள்ளனர். இதனால் அங்கு காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலை உருவாகியுள்ளது.

ALSO READ:  பிரதமர் மோடியை முடிக்க சதியா? பீகாரில் கைதானவரிடம் விசாரணை தீவிரம்!

இந்த நிலையில், ஜோதிராதித்யா சிந்தியாவை தொடர்ந்து குணா, சாகர், அசோக் நகர், குவாலியர், இந்தூர், சிவ்புரி மற்றும் வேறு சில மாவட்டங்களில் இருந்து மாவட்ட தலைவர்கள் உட்பட சுமார் 10,000 காங்கிரஸ் நிர்வாகிகள் விலகி பா.ஜ.க. வில் நேற்று ஒரே நாளில் இணைந்துள்ள தாகவும், மேலும் பல ஆயிரம் காங்கிரசார் வெளியேறி பா.ஜ.க. வில் இணைவார்கள் என்றும் காங்கிரஸ் கட்சியின் மாநில முன்னாள் தலைவரும், தீவிர சிந்தியா ஆதரவாளருமான சதுர்வேதி தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories