December 6, 2025, 5:58 AM
24.9 C
Chennai

ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப் படுமா? மத்திய அரசு பரிசீலனை!

144 photo - 2025

நாடு முழுவதும் மேலும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு மாநிலங்கள் விடுத்த கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து செய்தி ஏஜென்ஸி நிறுவனம் வெளியிட்ட தகவலில், நாடு தழுவிய ஊரடங்கை, மேலும் நீட்டிக்க மத்திய அரசு யோசனை செய்து வருகிறது. மாநில அரசுகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்து எழுந்த கோரிக்கையை அடுத்து, மத்திய அரசு இந்த யோசனையை மேற்கொண்டிருக்கிறது என்று தகவல் வெளியிட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் வைரஸ் தொற்றான கொரோனா தொற்றால், இந்தியாவிலும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. முன்னதாக, கொரோனா பரவல் சமூகப் பரவலாக மாறி பெருமளவு மக்களை பாதித்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில், நாடு முழுதும் லாக் டவுன் உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. கடந்த மார்ச் 21ஆம் தேதி மக்கள் ஊடரங்கு என்பதை பிரதமர் மோடி அறிவித்தார். பின்னர் ஒரு நாள் மட்டும் அல்லாது, தொடர்ந்து, மார்ச் 24ஆம் தேதி முதல், நாடு தழுவிய ஊரடங்கை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

கொரோனா தொற்றுநோய் பரவலைத் தடுப்பதற்காக, வெளியில் நடமாடாமல் வீடுகளுக்குள்ளேயே தனித்திருந்து சமூக விலகலைக் கடைப்பிடித்து, நோய்த் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று அரசு அறிவித்தது. அதன் அடிப்படையில், நாடு தழுவிய ஊரடங்கு தற்போது இருந்து வருகிறது. அரசு அறிவித்த 21 நாள் முழு ஊரடங்கு வரும் 14 ஆம் தேதி நிறைவடையும். ஆனால், தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. எனவே ஊரடங்கை மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று, மகாராஷ்டிரா, தெலங்காணா உள்ளிட்ட மாநிலங்கள், மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கின்றன.

21 நாள் ஊரடங்கு முடிந்த பின்னர் எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று பல்வேறு தரப்பினரும் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தினர். மக்கள் கூட்டமாகத் திரண்டு தெருக்களில் இறங்கினால் கொரோனா பரவல் கட்டுப் படுத்தல் இயலாததாகிவிடும் என்று கூறுகின்றனர். இதையே பல மாநிலங்களும் கூறுவதால், ஊரடங்கு நிலை நீட்டிப்பு குறித்து மத்திய அரசு யோசனை செய்து வருவதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories