ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப் படுமா? மத்திய அரசு பரிசீலனை!

144 photo - 2026

நாடு முழுவதும் மேலும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு மாநிலங்கள் விடுத்த கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து செய்தி ஏஜென்ஸி நிறுவனம் வெளியிட்ட தகவலில், நாடு தழுவிய ஊரடங்கை, மேலும் நீட்டிக்க மத்திய அரசு யோசனை செய்து வருகிறது. மாநில அரசுகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்து எழுந்த கோரிக்கையை அடுத்து, மத்திய அரசு இந்த யோசனையை மேற்கொண்டிருக்கிறது என்று தகவல் வெளியிட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் வைரஸ் தொற்றான கொரோனா தொற்றால், இந்தியாவிலும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. முன்னதாக, கொரோனா பரவல் சமூகப் பரவலாக மாறி பெருமளவு மக்களை பாதித்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில், நாடு முழுதும் லாக் டவுன் உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. கடந்த மார்ச் 21ஆம் தேதி மக்கள் ஊடரங்கு என்பதை பிரதமர் மோடி அறிவித்தார். பின்னர் ஒரு நாள் மட்டும் அல்லாது, தொடர்ந்து, மார்ச் 24ஆம் தேதி முதல், நாடு தழுவிய ஊரடங்கை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

ALSO READ:  மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

கொரோனா தொற்றுநோய் பரவலைத் தடுப்பதற்காக, வெளியில் நடமாடாமல் வீடுகளுக்குள்ளேயே தனித்திருந்து சமூக விலகலைக் கடைப்பிடித்து, நோய்த் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று அரசு அறிவித்தது. அதன் அடிப்படையில், நாடு தழுவிய ஊரடங்கு தற்போது இருந்து வருகிறது. அரசு அறிவித்த 21 நாள் முழு ஊரடங்கு வரும் 14 ஆம் தேதி நிறைவடையும். ஆனால், தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. எனவே ஊரடங்கை மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று, மகாராஷ்டிரா, தெலங்காணா உள்ளிட்ட மாநிலங்கள், மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கின்றன.

21 நாள் ஊரடங்கு முடிந்த பின்னர் எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று பல்வேறு தரப்பினரும் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தினர். மக்கள் கூட்டமாகத் திரண்டு தெருக்களில் இறங்கினால் கொரோனா பரவல் கட்டுப் படுத்தல் இயலாததாகிவிடும் என்று கூறுகின்றனர். இதையே பல மாநிலங்களும் கூறுவதால், ஊரடங்கு நிலை நீட்டிப்பு குறித்து மத்திய அரசு யோசனை செய்து வருவதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

ALSO READ:  தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories