மது விற்பனைக்கு அனுமதி இல்லை: கேசிஆர் உறுதி!

Published:

kcr telangana - 2026

கொரோனா காரணமாக தெலங்காணா அரசாங்கம் மது விற்பனையை நிறுத்தி வைத்துள்ளது. அதனால் குடிமகன்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். மதுவிற்பனையை நிறுத்திய பின் குடிமகன்கள் மன அமைதி இன்றி மனநல மருத்துவ மனைக்குக் கூட அதிக எண்ணிக்கையில் சென்று சேர்ந்து உள்ளார்கள். சிலர் தற்கொலை கூட செய்து கொண்டுள்ளார்கள்.

சில மாநிலங்களில் மது இல்லா விட்டால் தாங்கமுடியாத பேஷண்ட் களுக்காக ஆன்லைன் மது விற்பனையை அமல் செய்துள்ளார்கள். இப்படி இருக்கையில் சில நாட்களாக தெலங்காணாவில் மது விற்பனை ஏப்ரல் 15ல் இருந்து தொடங்கும் என்ற செய்தி வைரலாக சுற்றி வந்தது. இதனால் குடிமகன்கள் மிகவும் ஆசையோடு ஏப்ரல் 15ம் தேதிக்காக எதிர்பார்த்திருந்தார்கள்.

ஆனால் அவர்களுக்கு முதல்வர் மீண்டும் ஏமாற்றமே அளித்துள்ளார். பிரதமர் மோடியோடு வீடியோ கான்பரன்சின் பிறகு தெலங்காணா முதல்வர் கேசிஆர் செய்தியாளர்களோடு உரையாடினார். அப்போது அவர் லாக்டௌன் எடுக்கும் வரை… முழுமையாக எடுக்கும் வரை மது விற்பனைக்கு அனுமதிக்க இயலாது என்று தெளிவுபடுத்தி விட்டார். அது குறித்த அவருடைய செய்தியாளர் கூட்ட பேச்சு வைரலாகி வருகிறது.

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img