ஸ்மிருதி இராணியிடம் மன்னிப்பு கோரியது ஃபேப் இண்டியா

Published:

பனாஜி: கோவா மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்டிருந்த மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, அங்கே ஃபேப் இந்தியா என்ற ரெடிமேட் ஷோரூமில் துணிகள் வாங்கச்சென்றார். அப்போது உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்தக் கடையும் பூட்டி சீல் வைக்கப்பட்டு, அதன் மேலாளர் உள்பட ஊழியர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஃபேப் இண்டியா நிறுவனம், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியிடம் நடந்த தவறுக்கு மன்னிப்புக் கோரியுள்ளது.

Related articles

Recent articles

spot_img