குளிர் நடுக்கி எடுக்கிறது! தெலங்காணாவில் மக்கள் அவதி!

Published:

telangana-winter1
telangana-winter1

தெலங்காணா மாநிலத்தில் குளிர் நடுக்கி எடுக்கிறது. வெப்பநிலை மிகவும் குறைந்துவிட்டது.

மிகக் குறைந்த அளவு குமுரம்பீம் மாவட்டத்தில் 4.3 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதிலாபாத் 4.6டிகிரி, மேட்சல் மால்காஜ்கிரி மாவட்டத்தில் 7.3, ஹைதராபாத்தில் 10.4 செல்சியஸ் பதிவாகியுள்ளது.

தெலங்காணா மாநிலத்தில் தினமும் இரவு நேரத்தில் வெப்பநிலை மிக குறைந்து காணப்படுகிறது. குளிர் காற்றினால் மக்கள் நடுநடுங்கி வருகிறார்கள். இன்னும் இரண்டு நாட்களுக்கு மேலும் குளிர் அதிகமாக இருக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

telangana-winter2
telangana-winter2

இமயமலையிலிருந்து மாநிலத்தை நோக்கி குளிர் காற்று வீசுவதாக தெரிகிறது. மாநிலத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வறட்சியான சூழ்நிலை நிலவும் என்றும் ஹைதராபாத் வானிலை மையம் தெரிவித்துள்ளது. குளிர் காற்றின் தாக்கத்தால் இரவு நேரத்தில் வெப்பநிலை மிக மிக குறைந்து குளிர் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

செவ்வாய் புதன் கிழமைகளில் பல இடங்களில் மிகக் குறைந்த அளவு வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தார்கள். அதிலாபாத், கொமுரம்பீம் மாவட்டங்களில் வெப்பநிலை ஒரேயடியாக விழுந்துவிட்டது.

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

அதிலாபாத் மாவட்டத்தில் 3.6 டிகிரி செல்ஷியஸ், சங்காரெட்டி மாவட்டத்தில் 3.8, கொமுரம்பீம் மாவட்டத்தில் 4.3, குறைந்த அளவு வெப்பமாக பதிவாகியுள்ளன.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img