‘கலியுக கர்ணன்’ சோனுசூடுக்கு கோயில்! ரியல் ஹீரோ என பாராட்டு!

Published:

sonu-sood-temple
sonu-sood-temple
  • கலியுக கர்ணன் சோனூசூடுக்கு தெலங்காணாவில் கோவில்.
  • ரியல் ஹீரோ என்று பாராட்டு.

பாலிவுட் நடிகர் சினிமாவில் வில்லனாக நடித்தாலும் நிஜ வாழ்க்கையில் ஹீரோவாகி பலருக்கும் உதவி செய்து வருவதால் கலியுக கர்ணனாக புகழப் படுகிறார்.

அண்மையில் தெலங்காணா மக்கள் சோனூசூடை கௌரவிக்கும் விதமாக கோவில் கட்டிய ஆரத்தி எடுத்தார்கள்.

பாலிவுட் நடிகர் சோனுசூட் சினிமாவில் வில்லனாக நடித்தாலும் நிஜ வாழ்க்கையில் கர்ணனாக ரியல் ஹீரோவாக உள்ளதை மக்களை உணர்ந்துள்ளார்கள்.

மார்ச் மாதத்தில் விதிக்கப்பட்ட கொரோனா வைரஸ் லாக்டௌனால் பல இடங்களில் சிக்கியிருந்த ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவியாக நின்று அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்து கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் இடம் பெற்றார்.

இதுவரை தன் உதவி வேண்டியவர்கள் அனைவருக்கும் உதவி செய்து ரியல் ஹீரோவாக, ஆபத்பாந்தவனாக நின்றுள்ளார். அதனால்தான் அவரை “தேசம், பிரபஞ்சம் அனைத்திலுமே மனசுல மகாராஜாவாகவும் கலியுக கர்ணனாகவும்” தெலுங்கானா மக்கள் போற்றுகிறார்கள்.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

இந்த வரிசையில் அவருடைய ரசிகர்கள் தம் குழந்தைகளுக்கும் கடைகளுக்கும் அவர் பெயரையே வைத்து உள்ளதோடு கூட மண்டலபால கிராமத்தில் சோனூசூட் சிலையை அமைத்து தம் அன்பை வெளிப்படுத்தி உள்ளார்கள்.

அதோடு அண்மையில் தெலங்காணா மக்கள் சோனூசூடை கவுரவிக்கும் விதமாக ஒரு கோவிலை கட்டி உள்ளார்கள். இந்த சம்பவம் எங்கோ அல்ல… சித்திப்பேட்டை மாவட்டத்திலுள்ள துப்பாதண்டாவில் நடந்துள்ளது.

கோடிக்கணக்கானவர்களின் அன்பை சம்பாதித்த நடிகர் சோனூசூடை போற்றும் விதமாக இந்த கோவிலை கட்டியதாக துப்பாதண்டா மக்கள் தெரிவிக்கிறார்கள்.

சோனூசூட் விக்ரஹம் தயாரித்த சிற்பி மற்றும் உள்ளூர் மக்களின் முன்னிலையில் ஞாயிறன்று ஆலய தொடக்க விழா கோலாகலமாக நடந்தேறியது. இந்த சந்தர்ப்பத்தில் உள்ளூர் மக்கள் ஜெய்ஹோ சோனுசூட் என்று கோஷம் எழுப்பினார்கள். அதோடு அவருடைய சிலைக்கு ஆரத்தி எடுத்து பூஜைகளும் செய்தார்கள்.

அதுமட்டுமல்ல… இந்த கோவில் கட்டுவதற்கு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சித்தி பேட்டை மாவட்டம் அதிகாரிகள் கூட உதவி செய்தது தான் சிறப்பு.

சோனூசூட் செய்த சேவைகளுக்கு அடையாளமாக அவருடைய கோவிலை கட்டி உள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தார்கள்.

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img