ஜெகனின் ஆந்திராவில் அவலம்: கிருஷ்ணர் கோயிலில் ரத்தமும் மாமிசமும் வீசி அசிங்கம்!

Published:

andhra-prakasam-district-krishna-temple
andhra-prakasam-district-krishna-temple
  • ஆந்திர பிரதேசத்தில் பிரகாசம் மாவட்டத்தில் கிருஷ்ணர் கோவிலில் அசிங்கம்
  • இரத்தத்தை தெளித்து மாமிசத் துண்டுகளை வீசி எறிந்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பிரகாசம் மாவட்டம் தர்சி என்ற நகரில் மேற்கு பஜாரில் உள்ள ஶ்ரீகிருஷ்ணர் கோவிலில் ரத்தமும் மாமிசத் துண்டுகளும் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரகாசம் மாவட்டத்தில் தர்ஷி அண்மையிலுள்ள ஸ்ரீ கிருஷ்ணா கோவிலில் அபச்சாரம் நேர்ந்துள்ளது. தர்சி மண்டலம் மேற்கு பஜாரில் உள்ள கோவிலில் ரத்தமும் மாம்ஸம் துண்டுகளும் காணப்பட்டதால் பரபரப்பாக உள்ளது.

நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள் கோவில் வளாகத்தில் ரத்தத்தைத் தெளித்து மாமிசத் துண்டுகளை வீசி எறிந்து உள்ளார்கள். கோவில் சுவர்களில் ரத்தத்தால் கை முத்திரையைப் பதித்துள்ளார்கள்.

அதுமட்டுமின்றி ஆலய வளாகத்தில் உள்ள முன்னாள் எம்எல்ஏ பூச்சேபல்லி சிவபிரசாத்ரெட்டி அமைத்த கல்வெட்டின் மீது கூட ரத்தத்தை பூசி உள்ளார்கள்.

கோவில் வளாகத்திலேயே ஏதோ ஜந்துவை கொன்றிருக்க வேண்டுமென்று உள்ளூர் மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். இவ்வாறு கோவிலில் அபசாரம் நேர்ந்தது குறித்து உள்ளூர் மக்கள் வருத்தத்தில் உள்ளார்கள்.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

கோவிலுக்கு வரும் பக்தர்களை அச்சமூட்டுவதற்காகவே இதுபோன்ற கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டுள்ளதாக பக்தர்கள் தெரிவிக்கிறார்கள். தர்சியில் இது போன்ற சம்பவம் நேர்ந்ததால் பல சந்தேகங்கள் வெளிப்படுகின்றன.

இதற்கு பின்னால் அரசியல் நோக்கம் இருக்கிறது என்று மக்கள் நிச்சயமாகவே கூறுகிறார்கள். அமைதிக்கு இருப்பிடமாகத் தர்சியில் இதுபோன்ற ஒரு சம்பவம் நேர்ந்து உள்ளதால் பல சந்தேகங்கள் ஏற்படுகின்றன.

இதன் பின்னால் அரசியல் நோக்கம் இருக்கும் என்று சந்தேகம் ஏற்படுகிறது. முன்னாள் எம்எல்ஏ பூச்சிபல்லி மீது கோபத்தில் இவ்வாறு செய்திருக்கலாம் என்று பலரும் கூறுகிறார்கள்.

நேற்று தர்சியில் நடந்த முதல்வர் ஜெகன் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் முன்னாள் எம்எல்ஏ பூச்சிபல்லி மீது எம்எல்ஏ மத்திசெட்டி வேணுகோபால் கடுமையாக விமர்சனம் செய்த அதே நாள் இரவில் இந்த சம்பவம் நடந்துள்ளதால் அரசியல் நோக்கமே காரணமாக இருக்கும் என்று எங்கும் சந்தேகத்தால் மக்கள் பேசி வருகிறார்கள்.

உள்ளூர் மக்கள் புகார் அளித்ததால் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து சேர்ந்து விசாரித்து வருகின்றனர்.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img