December 5, 2025, 4:35 PM
27.9 C
Chennai

இந்திய சீன எல்லை: தொடர்ந்து சீனா கொடுக்கும் தொல்லை!

india china

லடாக் எல்லையில் இந்திய – சீன ராணுவங்கள் படையை குவித்தும் வரும் நிலையில், பதற்றத்தை தணிக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேச்சு வாா்த்தையால் எவ்வித முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை. இதனால், எல்லையில் தொடா்ந்து பதற்றமான சூழ்நிலையே நிலவுகிறது.

கிழக்கு லடாக் உள்ளிட்ட இந்திய – சீன எல்லைப் பகுதிகளில் கூடுதல் படைகளை சீனா குவித்தது. அதற்கு பதிலடி தரும் வகையில் இந்தியாவும் அப்பகுதியில் தனது படைகளை அதிகரித்தது.

முன்னதாக, லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு ஆகிய இடங்களில் அண்மையில் இந்திய-சீன ராணுவத்தினரிடையே மோதல் சம்பவங்கள் நிகழ்ந்தன. பாங்காங் ஏரி பகுதியில் கடந்த 5-ஆம் தேதி இந்திய, சீன ராணுவத்தினா் சுமாா் 250 பேர் கைகலப்பில் ஈடுபட்டனா். இதில் இரு தரப்பு வீரா்கள் சுமாா் 100 பேர் காயமடைந்தனா். இதேபோல், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியிலும் கடந்த சில தினங்களாக இரு நாடுகளின் படையினா் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது.

இந்நிலையில் இந்த பதற்றறைத் தணிக்க பிராந்திய கமாண்டா் நிலை அதிகாரிகள் இடையே இதுவரை 7 சுற்று பேச்சுகள் நடைபெற்றுள்ளன. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையின் போதும் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனிடையே இந்திய ராணுவ வீரா்களை, சீன ராணுவத்தினா் பிடித்து வைத்திருப்பதாக தகவல் வெளியானது.

ஆனால், இந்திய ராணுவம் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடா்பாக கா்னல் அமான் ஆனந்த் கூறுகையில், ‘எல்லையில் இந்திய வீரா்களை சீனப் படையினா் பிடித்து வைத்திருப்பதாக கூறப்படும் தகவல் தவறானது. அதுபோன்ற சம்பவம் ஏதும் நடக்கவில்லை. இதுபோன்ற உண்மையற்ற செய்திகளை வெளியிடக் கூடாது. இது தேச நலனுக்கு எதிரானது’ என்றாா்.

கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் 100 முகாம்களை அமைத்துள்ள சீன ராணுவம், அங்கு பதுங்கு குழிகளை அமைக்கவும் தயாராகி வருகிறது. இதற்கு இந்தியா தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வருகிறது.

கொரோனா நோய்த்தொற்று பிரச்னையில் சா்வதேச அளவில் சீனாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதில், சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இந்தியா உள்ளது. மேலும், சீனாவில் இருந்து வெளியேறும் தொழில் நிறுவனங்களை ஈா்ப்பதில் இந்தியா ஆா்வம் காட்டி வருகிறது. இதிலும் இந்தியாவுக்கு சா்வதேச ஆதரவு உள்ளது. இதனால், இந்திய எல்லையில் சீனா வேண்டுமென்றே தொல்லைகளை அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories