இந்திய சீன எல்லை: தொடர்ந்து சீனா கொடுக்கும் தொல்லை!

india china

லடாக் எல்லையில் இந்திய – சீன ராணுவங்கள் படையை குவித்தும் வரும் நிலையில், பதற்றத்தை தணிக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேச்சு வாா்த்தையால் எவ்வித முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை. இதனால், எல்லையில் தொடா்ந்து பதற்றமான சூழ்நிலையே நிலவுகிறது.

கிழக்கு லடாக் உள்ளிட்ட இந்திய – சீன எல்லைப் பகுதிகளில் கூடுதல் படைகளை சீனா குவித்தது. அதற்கு பதிலடி தரும் வகையில் இந்தியாவும் அப்பகுதியில் தனது படைகளை அதிகரித்தது.

முன்னதாக, லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு ஆகிய இடங்களில் அண்மையில் இந்திய-சீன ராணுவத்தினரிடையே மோதல் சம்பவங்கள் நிகழ்ந்தன. பாங்காங் ஏரி பகுதியில் கடந்த 5-ஆம் தேதி இந்திய, சீன ராணுவத்தினா் சுமாா் 250 பேர் கைகலப்பில் ஈடுபட்டனா். இதில் இரு தரப்பு வீரா்கள் சுமாா் 100 பேர் காயமடைந்தனா். இதேபோல், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியிலும் கடந்த சில தினங்களாக இரு நாடுகளின் படையினா் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது.

ALSO READ:  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

இந்நிலையில் இந்த பதற்றறைத் தணிக்க பிராந்திய கமாண்டா் நிலை அதிகாரிகள் இடையே இதுவரை 7 சுற்று பேச்சுகள் நடைபெற்றுள்ளன. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையின் போதும் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனிடையே இந்திய ராணுவ வீரா்களை, சீன ராணுவத்தினா் பிடித்து வைத்திருப்பதாக தகவல் வெளியானது.

ஆனால், இந்திய ராணுவம் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடா்பாக கா்னல் அமான் ஆனந்த் கூறுகையில், ‘எல்லையில் இந்திய வீரா்களை சீனப் படையினா் பிடித்து வைத்திருப்பதாக கூறப்படும் தகவல் தவறானது. அதுபோன்ற சம்பவம் ஏதும் நடக்கவில்லை. இதுபோன்ற உண்மையற்ற செய்திகளை வெளியிடக் கூடாது. இது தேச நலனுக்கு எதிரானது’ என்றாா்.

கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் 100 முகாம்களை அமைத்துள்ள சீன ராணுவம், அங்கு பதுங்கு குழிகளை அமைக்கவும் தயாராகி வருகிறது. இதற்கு இந்தியா தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வருகிறது.

கொரோனா நோய்த்தொற்று பிரச்னையில் சா்வதேச அளவில் சீனாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதில், சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இந்தியா உள்ளது. மேலும், சீனாவில் இருந்து வெளியேறும் தொழில் நிறுவனங்களை ஈா்ப்பதில் இந்தியா ஆா்வம் காட்டி வருகிறது. இதிலும் இந்தியாவுக்கு சா்வதேச ஆதரவு உள்ளது. இதனால், இந்திய எல்லையில் சீனா வேண்டுமென்றே தொல்லைகளை அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

ALSO READ:  வேளச்சேரி - பிருங்கிமலை எம்ஆர்டிஎஸ்., ரயில் சேவை! பயணிகள் மகிழ்ச்சி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

Topics

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

Entertainment News

Popular Categories