April 19, 2025, 3:32 AM
30 C
Chennai

மதுரை நகரில் ஆட்டோக்கள் இரண்டு மடங்கு கட்டணம்: தொழிலாளர்கள் அவதி!

autos in madurai

தமிழகத்தில் பஸ் போக்குவரத்து இன்மையால், பல மாவட்டங்களில் ஆட்டோக்கள் செயல்படத் தொடங்கியுள்ளன. இரண்டு சக்கர வாகனங்கள் இயங்கினாலும், கிராமங்களிலிருந்து நகரத்துக்கு பணிக்கு வரும் தொழிலாளர்கள் ஆட்டோவில் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில், கருப்பாயூரணி, வரிச்சூர், சக்கிமங்கலம், திருப்பாலை, அய்யர் பங்களா, ஊமச்சிக்குளம், கடச்சனேந்தல், திருநகர், விளாச்சேரி, மண்டேலாநகர், அவனியாபுரம், விளாங்குடி, பரவை, சமயநல்லூர், மற்றும் மதுரை நகர் பகுதிகளில் ஆட்டோக்கள் அதிகளவில் இயக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு இயக்கப்படும் ஆட்டோக்களில் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக பல தொழிலாளர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் தெரிவிக்கின்றனர். கல்மேடு நகரிலிருந்து-  மதுரை அண்ணா நிலையத்துக்கு பஸ்களில் ரூ. 15-ம், ஆட்டோக்களில் ரூ. 20-ம் ஆட்டோக்களில் பயணி்ப்போரிடம் வசூலிக்கப்பட்டு வந்தது.

autos in madurai
autos in madurai

தற்போது பஸ்கள் இயக்கப்படாததால், மதுரை மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோக்களில், கல்மேடு நகரிலிருந்து- மதுரை அண்ணாநிலையம் வரை ரூ. 40-50 வரையிலும், மதுரை முனிச்சாலை முதல் தெப்பக்குளம் வரை ரூ. 50-ம் கட்டணமாக ஆட்டோ டிரைவர்கள் வசூலித்து வருவதாக மதுரை கல்மேடு நகரைச் சேர்ந்த ஹோட்டல் தொழிலாளி மாரியம்மாள் தெரிவித்தார்.

இவை தவிர சில ஆட்டோக்கள், சமூக இடைவெளியில்லாமலும், அதிக ஆட்களை ஏறறி பயணம் செய்து வருகின்றனர். இந்த ஆட்டோக்கள் மீது போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர் பொதுமக்கள்!

ALSO READ:  போலீஸ்காரர் வைத்திருந்த கள்ளத் துப்பாக்கி, தோட்டாக்கள்!

ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை, மதுரை வட்டார போக்குவரத்து அலுவலர்களை, மாவட்ட நிர்வாகம் அவ்வப்போது கண்காணித்தால் தான், கூடுதல் கட்டணம் வசூலிப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த முடியும் என்று கூறுகின்றனர் பொதுமக்கள்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்.19 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: ஹைதராபாத் அணியை எளிதாக எதிர்கொண்ட மும்பை அணி!

          ஆட்டநாயகனாக ஆல்ரவுண்டர் வில் ஜேக்ஸ் தான் எடுத்த 2 விக்கட்டுகளுக்காகவும் அதிரடி 36 ரன் களுக்காகவும் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழர்கள் சொத்தை அபகரிக்கத் துடிக்கும் வக்ப் வாரியம்: இந்து முன்னணி கண்டனம்!

இந்துக்களின் பராம்பரிய சொத்துக்களை பாதுகாக்க இந்திய பாராளுமன்றம் நிறைவேற்றிய வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசை

IPL 2025: சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

ஐ.பி.எல் 2025 – டெல்லி vs ராஜஸ்தான் டெல்லி - 16.04.2025 சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

Topics

பஞ்சாங்கம் ஏப்.19 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: ஹைதராபாத் அணியை எளிதாக எதிர்கொண்ட மும்பை அணி!

          ஆட்டநாயகனாக ஆல்ரவுண்டர் வில் ஜேக்ஸ் தான் எடுத்த 2 விக்கட்டுகளுக்காகவும் அதிரடி 36 ரன் களுக்காகவும் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழர்கள் சொத்தை அபகரிக்கத் துடிக்கும் வக்ப் வாரியம்: இந்து முன்னணி கண்டனம்!

இந்துக்களின் பராம்பரிய சொத்துக்களை பாதுகாக்க இந்திய பாராளுமன்றம் நிறைவேற்றிய வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசை

IPL 2025: சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

ஐ.பி.எல் 2025 – டெல்லி vs ராஜஸ்தான் டெல்லி - 16.04.2025 சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IPL 2025: தூள் கிளப்பிய பஞ்சாப் அணி

ந்த ஆண்டு ஐபிஎல் பேட்ஸ்மென்களின் சொர்க்கமாக விளங்குகிறது. 150 ரன்னுக்கும் குறைவான ஆட்டங்கள் வெகு சிலவாக உள்ளன. மட்டையாளர்கள் பந்துவீச்சாளர்களை வெளுவெளு என்று வெளுக்கிறார்கள்.

மு.க. ஸ்டாலினுக்கு மாநில சுயாட்சி ஜுரம்!

முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு மீண்டும் மாநில சுயாட்சி ஜுரம் பிடித்திருக்கிறது. திமுக தலைவர்களின் உள்ளே இருக்கும் வேறு கோளாறின் அறிகுறியாக அவர்களுக்கு அவ்வப்போது மாநில சுயாட்சி ஜுரம் வரும்.

Entertainment News

Popular Categories