December 6, 2025, 7:27 AM
23.8 C
Chennai

மாஸ்கில் முகம் மறைகிறதே என்ற கவலை இனி வேண்டாம்.. வந்தது ப்ரிண்டிங் மாஸ்க்!

mask kerala
mask kerala

கேரளத்தில் முககவசத்தில் நம்முடைய முகத்தை ப்ரிண்ட் செய்து அடையாளம் தெரிவதற்கு ஏதுவாக ஒரு கடை செய்து கொடுக்கிறார்கள்

கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க, வெளியில் நடமாடுவோர் அனைவரும், முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என, மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. முக கவசம் அணியாமல், வெளியே நடமாடுவோருக்கு, 100 ரூபாய் அபராதம் விதித்து வருகிறது.

இதனால் அனைவரும் முககவசம் அணிந்து வருகின்றனர் மருந்தகம் மட்டுமன்றி, பெட்டி கடை முதல், பல சரக்கு மளிகை கடைகளிலும் முக கவசம் விற்பனை செய்யப்படுகிறது.

mask kerala
mask kerala

இதில், குழந்தைகளை கவரும் கார்ட்டூன் படங்களும், இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்கேற்ப நடிகர் – நடிகையர் படம் அச்சிடப்பட்ட முக கவசங்களும் விற்பனைக்கு வந்துள்ளன.

இதில் பலருக்கு முககவசம் அணிவதால் தங்கள் முகம் தெரிவதில்லை என்ற ஏக்கமும் கவலையும் இருக்கிறது. இன்னுமொரு விஷயம் அறிமுகமான முகத்தைக்கூட அறியமுடியவில்லை என்ற கவலையும் உள்ளது.

இந்நிலையில் கேரளாவில் ஒரு கடையில் அவரவர் முகத்தை அணியும் மாஸ்கில் ப்ரிண்ட் செய்து தருகின்றனர் இந்த வீடியொ வைரலானது

அதே வகையில் தற்பொழுது காஞ்சிபுரத்தில் உள்ள, டி.டி.பி., சென்டர் ஒன்றில், ‘உங்கள் முகத்தையே முக கவசமாக மாற்றித் தருகிறோம்’ என, அறிவித்துள்ளனர்.

‘பாஸ்போர்ட்’ அளவு புகைப்படம் கொடுத்தால், அதில் உள்ள படத்தையே முக கவசத்தில் அச்சிட்டு தருகின்றனர். இது குறித்து, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த, முக கவசம் வடிவமைப்பாளர்கள் ஜெயசெல்வன், ஜெயமுத்து கூறியதாவது: முக கவசம் அணிந்து செல்லும்போது, முகம் பாதியளவு மறைந்து விடுகிறது.

இதனால், அவரவர் முகத்தையே, ‘பிரின்ட்’ செய்து முக கவசம் தயாரிக்க முடிவு செய்தோம். அதன்படி, பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை காலையில் கொடுத்தால், மாலையில், அவரவர் முகம் அச்சிட்ட, ‘பாலி காட்டன்’ துணியால் தயாரிக்கப்பட்ட முக கவசத்தை வழங்குகிறோம்.

அவரவரின் முகமே அச்சிட்டு தருவதால், காஞ்சிபுரம் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.இந்தத் துணியால் ஆன முக கவசம் அணிவது நல்லதா என்பது குறித்து, மருத்துவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories