வயது 76 ! ஊஞ்சலாடி பேரக் குழந்தைகளுக்கு கற்றுத் தரும் பாட்டி!

Published:

IMG WA
IMG WA

ஊஞ்சலாடி மகிழும் பாட்டி.

கொஞ்சம் வயதானாலே… சிறிது அதிகம் நடந்தாலோ அங்குமிங்கும் சென்று வந்தாலோ வீட்டில் உள்ள மகனும் மருமகளும் தடுப்பார்கள். இன்னும் என்ன இளம்வயதா உனக்கு? ஓர் இடத்தில் உட்காராமல் எதற்காக வீணாக சுற்றுகிறாய்? நாளைக்கு இடுப்பு வலி கால் வலி என்றால் யார் பார்ப்பார்கள்? போட்டதை சாப்பிட்டு கிருஷ்ணா ராமா என்று ஓரிடத்தில் படு என்பார்கள்.

அப்படி இருக்கையில் இத்தகைய முதிய வயதில் இந்தப் பெண்மணி செய்யும் வேலையை பாருங்கள். கண் சொருகி தலை சுற்றுகிறதா?

‘சிறுமல்லிப்பூவா’ பாட்டில் ஸ்ரீதேவி கூட இத்தனை வேகமாக ஊஞ்சலாடி இருக்கமாட்டார். யாரும் ஆட்டிவிடாமலே மான்போல் துள்ளி ஊஞ்சல் மேல் ஏறி நின்று ஆடுகிறார் இந்த முதியவர்.

இவர் பெயர் ஜெயம்மா. அனந்தபுரம் மாவட்டம் பிராமணபல்லி கிராமத்தை சேர்ந்தவர். வயது 76. ஆனால் இவர் ஜோராக நடந்து வருவதைப் பார்த்தால் 16 வயது குமரி போலுள்ளார். அந்தக் கால உணவு அப்படிப்பட்டது.

இவர் காலை ஐந்து மணிக்கே எழுந்து விடுவார். உடனே அரைமணி நடைபயிற்சி. பின் உடற்பயிற்சி. பகல் 12 மணிக்கு மதிய உணவு. இரவு 7 மணிக்கே இரவு உணவுண்டு 8 மணிக்கெல்லாம் உறங்கிவிடுவார்.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

தினையரிசி, ராகிகூழ், கீரைகள் இவர் உணவு. உடலை திடமாக வைத்திருப்பதற்கு இந்த உணவு வகைகளே காரணம் என்கிறார்.

இந்த வீடியோவை பார்ப்பவர்கள் 100 வயதை தாண்டினாலும் இவர் இப்படியே ஊஞ்சல் ஆடுவார் போலும் என்று வியக்கிறார்கள்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img