தேசத்தை உலுக்கிய கண்ணீர் சம்பவம்: கர்ப்பிணி யானையின் குரூர மரணம்!

elephant
elephant

கேரளத்தில் இரு தினங்களுக்கு முன்னர், பசியால் தவித்த கர்ப்பிணி யானைக்கு ‘மர்ம நபர்கள்’ அன்னாசிப் பழத்தில் வெடிமருந்தை வைத்துக் கொடுத்ததில், அந்த யானையின் வாய், தொண்டைப் பகுதிகள் கிழிந்து, காயம் பட்டு, அந்த எரிச்சலைத் தணிக்க நீருக்குள் யானை அமிழ்ந்து இருந்து, பின்னர் உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. இது தேசிய அளவில் எதிரொலித்தது. மனிதத் தன்மையற்ற இந்தக் காட்டுமிராண்டித் தனத்தைச் செய்தவர்களை உடனடியாக தண்டிக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்தன. சமூகத் தளங்களிலும் இந்த முழக்கம் பெரும் அளவில் எதிரொலித்தது!

elephant
elephant

இது குறித்த சில பகிர்வுகள்:

கேரள மலப்புரத்தில் மனசாட்சி என்பதை அறுத்து கூறுபோட்டது போல யானைக்கு அன்னாசியில் வெடியை வைத்து கொடுத்திருக்கிறார்கள். யானையின் வாய், தொண்டை பகுதிகள் கிழிந்து காயமாகிவிட்டது.அந்த எரிச்சலை தாங்க முடியாமல் குளத்தில் இறங்கி நின்று மரணித்துவிட்டது.?

யானையின் வயது 15,கூடவே அது கர்ப்பமாக இருந்தது என தெரிய வந்துள்ளது.இஸ்லாமிய படையெடுப்பாளர்கள்தான் இந்திய யானைகளின் மேல் தீராத வெறுப்பை வைத்திருந்தார்கள்.இன்னும் அது மாறவில்லையா?

சரஸ்வதி மகாலில் ஒரு புகழ்பெற்ற பாலகாப்பியர் இயற்றிய ‘கஜசாஸ்த்திர’ நூல் உள்ளது.அதில் யானையின் கர்ப்ப காலத்தை குறிப்பிடும் இடத்தில் எப்போதும் நீரில் முழுக விருப்பம் கொள்வது ‘கஜ கர்பிணி லக்ஷணம்’ என்ற ஒன்றை சொல்லியிருக்கிறார்கள்.

elephant sand art
elephant sand art

ஒருவேளை அதனுடைய கர்ப்ப விருப்புதான் நீரில் இறங்க வைத்ததா அதை என்று தெரியவில்லை.நினைக்கவே வேதனையாக உள்ளது.சூலுற்ற யானை சாபம் கொடுப்பது போல நீரில் இறங்கி இறந்து போயிருக்கிறது.

மன்னர் சரபோஜியை பற்றி ஒரு குறிப்புண்டு.பொதுவாகவே அரசர்கள் தங்கள் பட்டத்து யானை உண்ட பிறகுதான் தாங்கள் உணவு உண்பார்கள் என்கிற ஒன்றையும் சொல்கிறார்கள்.அதையே அவரும் கடைபிடித்துள்ளார்.இதிலெல்லாம் ஏதோ ஒரு மறைமுக கயிறுகள் நாமறியாமல் பிணைக்கப்பட்டுள்ளது.

எனவே மலப்புரத்தில் நடந்தது நல்ல அறிகுறி இல்லை.இதை செய்தவன்,ரசித்தவன்,வேடிக்கை பார்த்தவன் என அழியப்போவது உறுதி.

elephant killed
elephant killed

கேரளா பாலக்காடு வனப் பகுதியில் உணவு தேடி வந்த யானைக்கு அன்னாசிப்பழத்தில் வெடி மருந்தை வைத்துக் கொடுக்க, வாயில் வெடித்து, உணவெடுக்க முடியாமல், உயிர் விட்டிருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியைத் தருகின்றது. அந்த யானை தாய்மையடைந்யிருந்தது பெரும் துயரம்.
– அர்ஜுன் சரவணன் (நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பிரசாரத்தில் இருந்த திமுக., வேட்பாளர்; வீட்டில் 122 பவுன் நகை கொள்ளை!

தேர்தல் நேரத்தில் திமுக வேட்பாளர் வீட்டில் திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

Topics

பிரசாரத்தில் இருந்த திமுக., வேட்பாளர்; வீட்டில் 122 பவுன் நகை கொள்ளை!

தேர்தல் நேரத்தில் திமுக வேட்பாளர் வீட்டில் திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

Entertainment News

Popular Categories