சிரஞ்சீவிக்கு முடி வெட்டி விடும் சுஷ்மிதா!

Published:

chiranjeevi sushmitha
chiranjeevi sushmitha

மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு அவருடைய மகள் சுஷ்மிதா கொணிதெல ஹேர் கட் செய்துள்ளார். லாக்டௌனில் இவ்வாறு தன் தந்தைக்கு தலை முடி வெட்டிவிடுவதாக தெரிவித்தார்.

ஃபாதர்ஸ் டே தொடர்பாக அவர் இந்த ஸ்பெஷல் வீடியோவை சோசியல் மீடியாவில் ஷேர் செய்தார். ‘லாக்டௌன் ஆக்டிவிடீஸ்’… வீட்டிலிருந்து வெளியில் செல்லமுடியாத போது என்ன செய்வது? என்று வீடியோவில் சுஷ்மிதா கூறியுள்ளார்.

இதற்கு சிரஞ்சீவி பதிலளிக்கையில் ஆமாம் எங்களுக்கு நாங்களே உதவி செய்து கொள்கிறோம் என்று புன்னகையோடு கூறியுள்ளார்.

உன் அன்புக்கு நன்றி அப்பா! சிம்பிள் ஹேர் கட்டிங்கிலிருந்து வாழ்க்கையில் பெரிய விஷயங்கள் வரை அனைத்திலும் என்னை நம்பி உன் தலையைக் கொடுத்துள்ளாய். அது என்னிடம் தன்னம்பிக்கையை நிரப்பி உள்ளது. தந்தையின் சிறப்பு குணம் அதுதான் போலும்! லவ் யூ! ஹேப்பி ஃபாதர்ஸ் டே என்று சுஷ்மிதா வீடியோவில் கேப்ஷன் இட்டுள்ளார்.

தந்தைக்கும் மகளுக்கும் இடையில் உள்ள அன்பைக் காட்டும் இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரல் ஆகி ரசிகர்களின் அபிமானத்தை ஈர்த்துள்ளது. ஆயிரம் பேர் பார்வையாளர் களோடு கூட நடிகை மஞ்சு லக்ஷ்மி லவ் சிம்பல் ஷேர் செய்துள்ளார். நிஹாரிகா சோ க்யூட் என்று காமெண்ட் செய்துள்ளார்.

ALSO READ:  இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

இவற்றோடு கூட சுஷ்மிதா சிறுவயதில் தந்தையோடு சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோக்களை கூட ஷேர் செய்துள்ளார். இதில் முடி வெட்டும் வீடியோ.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img