ஸ்ரீநகரில் நடந்த துப்பாக்கி சூட்டில் தீவிரவாதி சுட்டு கொலை! சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் மரணம்!

miltry 1

ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நேற்று நள்ளிரவு தீவிரவாதிகளுக்கும், போலீஸாருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. தீவிரவாதியின் துப்பாக்கிச் சூட்டில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் உயிரிழந்தார். தீவிரவாதி ஒருவரை போலீஸார் சுட்டுக்கொன்றனர்.

ஸ்ரீநகரின் மால்பாக் பகுதியில் உள்ள ஹஸ்ரத்பால் மசூதி அருகே 3 தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று நள்ளிரவு போலிஸீார், சிஆர்பிஎஃப் படையினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

அப்போது, திடீரென அப்பகுதியில் இருந்த தீவிரவாதிகள் போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தினர். இதற்கு போலீஸார் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது.

இரு தரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்ற 2 தீவிரவாதிகளும் தப்பிவிட்டனர். அவர்களைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தத் தாக்குதலில் 3 சிஆர்பிஎஃப் வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும், 92-பேஸ் ராணுவ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் சிஆர்பிஎஃப் காவலர் குல்தீப் உராவன் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதி எந்த அமைப்பைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். தேடுதல் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது.

இதுகுறித்து போலீஸ் ஐஜி விஜயகுமார் கூறுகையில், ‘ஸ்ரீநகரின் மால்பாக் பகுதியில் நேற்று இரவு போலீஸார் நடத்திய என்கவுன்ட்டரில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சிஆர்பிஎஃப் ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். தொடர்ந்து தேடுதல் பணிகள் நடந்து வருகின்றன. முழுமையான விவரங்களை விரைவில் வழங்குகிறோம்’ என்று தெரிவித்தார்.

ஸ்ரீநகரில் கடந்த வாரத்தில் இருந்து நடக்கும் 4-வது என்கவுன்ட்டர் இதுவாகும். இதுவரை கடந்த வாரத்திலிருந்து 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

Topics

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories