அருணாச்சல பிரதேசத்தில் ஐஎம் அமைப்பை சேர்ந்தவர்கள் 6 பேர் சுட்டுக் கொலை!

ap

அருணாச்சலப் பிரதேச மாநிலம், கோன்ஸா பகுதிக்குள் நுழைய முயன்ற என்எஸ்சிஎன் (ஐஎம்) கிளர்ச்சியாளர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே இன்று அதிகாலை நடந்த துப்பாக்கிச் சண்டையில் கிளர்ச்சியாளர்கள் 6 பேர் கொல்லப்பட்டனர்.

அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த தி நேஷனல் சோசலிஸ்ட் கவுன்சில் ஆஃப் நாகாலிம் (ஐசக்-முவிவா) எனும் என்எஸ்சிஎன் (ஐஎம்) கிளர்ச்சியாளர்கள் நாகாலாந்து மக்களுக்காக தனியாக நாடு கேட்டு, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுதமேந்திப் போராடி வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 60 ஆண்டுகளாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால் அவ்வப்போது அருணாச்சலப் பிரதேச பகுதிக்குள் நுழைந்து வன்முறைச் செயல்களில் இந்தக் கிளர்ச்சியாளர்கள் ஈடுபடுவார்கள். இதனால் பாதுகாப்புப் படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும்.

இந்நிலையில் திராப் மாவட்டத்தில் தின்சுகா நகரிலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள கோன்ஸா பகுதியில் இன்று அதிகாலை என்எஸ்சிஎன் (ஐஎம்) கிளர்ச்சியாளர்கள் நுழைய முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த அசாம் ரைபிள் படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது.

இரு தரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் கிளர்ச்சியாளர்கள் 6 பேர் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டார்கள். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து அசாம் ரைஃபிள் படை தரப்பில் கூறுகையில், ‘கோன்ஸா பகுதியில் என்எஸ்சிஎன் (ஐஎம்) கிளர்ச்சியாளர்கள் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் ஊடுருவ முயல்கிறார்கள் என்று ரகசியத் தகவல் கிடைத்ததையடுத்து பாதுகாப்பைத் தீவிரப்படுத்தினோம்.

அப்போது ஊடுருவ முயன்ற கிளர்ச்சியாளர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். அசாம் ரைபிள் படை வீரர் ஒருவர் காயமடைந்தார்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Topics

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Entertainment News

Popular Categories