அருணாச்சல பிரதேசத்தில் ஐஎம் அமைப்பை சேர்ந்தவர்கள் 6 பேர் சுட்டுக் கொலை!

ap

அருணாச்சலப் பிரதேச மாநிலம், கோன்ஸா பகுதிக்குள் நுழைய முயன்ற என்எஸ்சிஎன் (ஐஎம்) கிளர்ச்சியாளர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே இன்று அதிகாலை நடந்த துப்பாக்கிச் சண்டையில் கிளர்ச்சியாளர்கள் 6 பேர் கொல்லப்பட்டனர்.

அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த தி நேஷனல் சோசலிஸ்ட் கவுன்சில் ஆஃப் நாகாலிம் (ஐசக்-முவிவா) எனும் என்எஸ்சிஎன் (ஐஎம்) கிளர்ச்சியாளர்கள் நாகாலாந்து மக்களுக்காக தனியாக நாடு கேட்டு, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுதமேந்திப் போராடி வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 60 ஆண்டுகளாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால் அவ்வப்போது அருணாச்சலப் பிரதேச பகுதிக்குள் நுழைந்து வன்முறைச் செயல்களில் இந்தக் கிளர்ச்சியாளர்கள் ஈடுபடுவார்கள். இதனால் பாதுகாப்புப் படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும்.

இந்நிலையில் திராப் மாவட்டத்தில் தின்சுகா நகரிலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள கோன்ஸா பகுதியில் இன்று அதிகாலை என்எஸ்சிஎன் (ஐஎம்) கிளர்ச்சியாளர்கள் நுழைய முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த அசாம் ரைபிள் படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது.

இரு தரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் கிளர்ச்சியாளர்கள் 6 பேர் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டார்கள். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து அசாம் ரைஃபிள் படை தரப்பில் கூறுகையில், ‘கோன்ஸா பகுதியில் என்எஸ்சிஎன் (ஐஎம்) கிளர்ச்சியாளர்கள் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் ஊடுருவ முயல்கிறார்கள் என்று ரகசியத் தகவல் கிடைத்ததையடுத்து பாதுகாப்பைத் தீவிரப்படுத்தினோம்.

அப்போது ஊடுருவ முயன்ற கிளர்ச்சியாளர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். அசாம் ரைபிள் படை வீரர் ஒருவர் காயமடைந்தார்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

Topics

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

Entertainment News

Popular Categories