திருச்சானூரிலும்… கொரோனா தொற்று! திருமலை தரிசனத்தை நிறுத்த காவல்துறை அதிகாரி கடிதம்!

tirupathi-thiruchanoor-temple
tirupathi-thiruchanoor-temple

திருமலா திருப்பதி தேவஸ்தானத்துக்கு தொடர்பான ஆலயங்களில் கொரோனா பாசிட்டிவ் செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. புதிதாக திருச்சானூர் பத்மாவதி அம்மவாரு ஆலயத்தில் கொரோனா சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆலயத்தில் பணிபுரியும் பொட்டு (மடப்பள்ளி) பணியாளருக்கு கொரோனா பாசிட்டிவாக முடிவு வெளியாகி உள்ளது. அதனால் உடனே ஆலய சுற்றுப்புற இடங்களுக்கு சானிடைஸ் செய்தார்கள் ஊழியர்கள். அதோடு பாசிட்டிவ் வந்த பணியாளரை தனிமைப்படுத்தல் மையத்துக்கு அனுப்பினார்கள்.

பொட்டு பணியாளர்களோடு இன்னும் யார் யார் தொடர்பில் இருந்தார்கள் என்ற விவரங்களையும் கேட்டு அறிந்து கொண்டு உள்ளார்கள் அதிகாரிகள். அதேபோல் கோவிலை தற்காலிகமாக மூடும் வாய்ப்பு உள்ளதாக செய்தி பரவியது.

அதுமட்டுமின்றி சீனிவாசமங்காபுரம் கோவிலில் இரண்டு பாசிட்டிவ் கேசுகள் பதிவாகின. அதனால் ஆலயத்தை அதிகாரிகள் தற்காலிகமாக மூடி வைத்தார்கள். மீதமுள்ள அர்ச்சகர்கள் மடப்பள்ளி சிப்பந்திகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளார்கள்.

சென்ற மாதம் திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் ஆலயத்தில் பணிபுரியும் ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் வந்ததால் இரண்டு நாட்கள் ஆலயத்தை மூடி வைத்தார்கள்.

tirumalathirupathi
tirumalathirupathi

இதனிடையே, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனத்தை தற்காலிகமாக நிறுத்தி வையுங்கள் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

தேவஸ்தான ஊழியர்கள் 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியிருப்பதால் பக்தர்களின் பாதுகாப்பை மனத்தில் கொண்டு தரிசனத்தை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்று திருப்பதி திருமலை நிர்வகிக்கும் காவல்துறை அதிகாரி ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். 

அந்தத் கடிதத்தில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பே முக்கியம். தரிசனம் நிறுத்தப்பட வேண்டும்.  ஏனென்றால் அது அத்தியாவசிய சேவை இல்லை  என தெரிவித்துள்ளார். 

திருமலையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நாள் ஒன்றுக்கு 12 ஆயிரம் பேர் சுவாமி தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுகின்றனர். இது மிகவும் ஆபத்தான போக்கு. இதுவரை ஒரு பக்தர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என தேவஸ்தானம் கூறுகிறது. ஆனால் தேவஸ்தான ஊழியர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதனை மறந்துவிட்டது. இது இப்படியே தொடர்ந்தால் தேவஸ்தான ஊழியர்களிடம் இருந்து கொரோனா தொற்று பக்தர்களுக்கு பரவும். மிகப் பெரிய இழப்பு ஏற்படுவதற்கு முன்பு உடனடி முடிவு எடுக்கப்பட வேண்டும்  என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று அர்ச்சகர் ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்திருப்பது, திருப்பதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை வட்டார ஆலயங்களில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

மாவட்டத்தில் உள்ள கோயில்களில், மார்ச்..6..ம் தேதி வெள்ளிக்கிழமை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

மார்ச் 1ல் மதுரை வரும் பிரதமர் மோடி! எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

வரும் ஞாயிறு மார்ச் 1 பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தமிழ்நாட்டில்...

‘3 முறை முதல்வர்’ ஓ.பன்னீர்செல்வம், ‘குடும்பக் கட்சி’ திமுக.,வில் இணைந்தார்!

மதிமுகவினர் திரும்பவும் திமுகவுக்கு வந்தபோது கருணாநிதி சொன்னார். "மதிமுக என்பதற்கு அர்த்தம் "மறுபடியும் திமுக" என்பதுதான்" இப்ப... அதிமுகவுக்கு அர்த்தம்  “அவங்களும் திமுகதான்”

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

T20 WC 2026: விறுவிறுப்பான கட்டத்தில் சூப்பர் 8 போட்டிகள்!

அரையிறுதிக்குச் செல்லும் அணிகள் எவை என இன்னமும் முடிவாகவில்லை. நாளை (27.02.2026) இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடியேயான ஆட்டம்

Topics

மதுரை வட்டார ஆலயங்களில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

மாவட்டத்தில் உள்ள கோயில்களில், மார்ச்..6..ம் தேதி வெள்ளிக்கிழமை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

மார்ச் 1ல் மதுரை வரும் பிரதமர் மோடி! எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

வரும் ஞாயிறு மார்ச் 1 பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தமிழ்நாட்டில்...

‘3 முறை முதல்வர்’ ஓ.பன்னீர்செல்வம், ‘குடும்பக் கட்சி’ திமுக.,வில் இணைந்தார்!

மதிமுகவினர் திரும்பவும் திமுகவுக்கு வந்தபோது கருணாநிதி சொன்னார். "மதிமுக என்பதற்கு அர்த்தம் "மறுபடியும் திமுக" என்பதுதான்" இப்ப... அதிமுகவுக்கு அர்த்தம்  “அவங்களும் திமுகதான்”

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

T20 WC 2026: விறுவிறுப்பான கட்டத்தில் சூப்பர் 8 போட்டிகள்!

அரையிறுதிக்குச் செல்லும் அணிகள் எவை என இன்னமும் முடிவாகவில்லை. நாளை (27.02.2026) இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடியேயான ஆட்டம்

ஹைதராபாத் தூத்துக்குடி இடையே நேரடி ரயில் சேவை; திருவண்ணாமலை வழி!

ரயில்வே வாரியம் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதற்கான அறிவிப்புகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.

தேசத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் காங்கிரஸ்!

ஏற்கெனவே நீங்கள் அம்மணக்கட்டைகள் தான் என்பது தேசத்திற்கு நன்கு தெரியும். பிறகு உடைகளை அவிழ்த்துப் போட என்ன அவசியம்? 

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

ஆன்மீகத்தை கையில் எடுத்தாலும் அதன்மூலம் சமூகநீதியை பரப்பிய ஸ்ரீ ராமானுஜரை தன் மடியில் வைத்துக் கொண்டாடிய தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.

Entertainment News

Popular Categories