புது தில்லி நிர்பயா ஆவணப் படத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு அவகாசம் கேட்டுள்ளதால், படத்தை ஒளிபரப்ப விதிக்கப்பட்டுள்ள தடையை ஏப்ரல் 15ம் தேதி வரை நீட்டித்து தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, நிர்பயா ஆவணப் படத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ள தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு, தில்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஆவணப் படத்துக்கு தடை விதிக்கப்பட்டது ஏன் என மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பியது. மேலும் தடையை நீக்கக் கோரும் பொது நல மனு குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அது கேட்டுக் கொண்டது
நிர்பயா ஆவணப் படத்துக்கு தடை நீட்டிப்பு
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

